157 - பதுங்கிய நிழலாக..

ஆசை
அனலாகத் தாக்கிற்று..
தலைக்கு மேலே..
அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தான்
அவன்..
அமைதியைத் தேடி..
அது நிழலாக
அவனது காலடிகளின் கீழேயே
பதுங்கிப் பதுங்கி
நகர்ந்துகொண்டிருந்தது..
பார்வைக்குப் படாமலேயே..
-௦-

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (14-Mar-12, 7:04 am)
பார்வை : 177

மேலே