!!! உறக்கமின்றி தவிக்கிறேன் !!!

சொகுசு பங்களா...
குலு குலு ஏசி அறை...
தேக்குமர கட்டில்...
பஞ்சு மெத்தைகள்...
பூ போன்ற தலையணைகள்...
வண்ணங்கள் வரைந்த
புசு புசு போர்வைகள்...
மென்மையான மெல்லிய
கரு இரவு - இப்படி
எல்லாமே இருந்தும்
உறக்கம் வராமல் தவிக்கிறேன்..!
ஓரம் கிழிந்த
ஓலைப்பாயில் - என்
தாயின் பழைய
பதினாறுமுழ நூற்புடவையை
போர்த்திக்கொண்டு உறங்கியே
பழகிப்போனதால்...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (14-Mar-12, 9:50 am)
பார்வை : 205

மேலே