நண்பன்

என்னை புரிந்துகொள்ள
நானே தடுமாறியபோது - என்
புரிதலாக வந்தவன்

என்னை ஏற்றுக்கொள்ள
சொந்தங்களே மறுத்தபோது - தன்
இதயத்தில் சுமந்தவன்

என்னில் கருக்கொண்ட
திறமைகளை இனங்கண்டு - எனக்கு
முகவரி தந்தவன்

எனகென்று ஒன்றென்றபோது
உயிர் கொடுக்கவும் துணிந்தபோது - என்
உயிராகி இருந்தான்

எழுதியவர் : ஆ. தைனிஸ் (28-Mar-12, 12:56 am)
பார்வை : 419

மேலே