“தானே” தாண்டவம்

காற்றே!
யார் மீது கோபம்?
ஏனிந்த ருத்ரதாண்டவம்?
காற்றே!
உனக்கே புழுக்கமா?
மரங்களை புடுங்கி
விசிறிக்கொண்டாயே!
எங்கள் வாழ்வாதாரத்தை
வியர்க்க வைத்தாயே!
வீழ்த்திவிட்டாயே!
எளியோரின் குடிசைகள்
உன் கூத்துப்பட்டரைக்கு
திரைச்சீலைகளா?
சீர்குலைத்து சிரித்தாயே!
உலகே!
இந்த உடமைபலிக்கு
உன் உதவியென்ன?