சஞ்சார வெளி

அல்லிக்குளத்தில் எறிந்த ஒட்டுச்சில்லியாக
சஞ்சரித்த வார்த்தைகள்
காத்திருந்த சலனத்தை அவிழ்த்துக் கரைத்து
முடிவில்லாத பிம்பங்களை வரைந்து செல்கின்றன
படர்ந்திருக்கும் பச்சைபாசியின் வழுவழுப்பென
புதர்மறை தண்ணீர் பாம்புகளின் நெலிசலென
நீண்டிருந்த நினைவுகளின் நிழல்கள்
கரையோர நீர்ப்பூச்சிகளின் அதிர்வலைத் திவலையாக
குமுழியெழுந்து அடங்க
கூத்தாடி கூத்தாடிக் கொண்டாடிக் களிக்கிறது
அரூப மனம்

எழுதியவர் : வே.முத்துக்குமார் (18-Apr-12, 4:42 pm)
சேர்த்தது : narpavi2004
பார்வை : 194

மேலே