தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது
இது-
எமதர்மரின் அரசாங்கம்
இங்கு-
விசாரணையின்றி
தீர்ப்புகள் எழுதுவதில்லை.
கூட்டமாக அழைத்து வரப்பட்ட
அமரர்களைப்பார்த்ததும்
அரியணையிலிருந்த
எமதர்ம ராஜா கேட்டார்....
“சித்ரகுப்தரே.....
இவர்கள் என்னபாவம்
செய்தார்கள்?” என்று.
“அத்தனைபேரும்
கலப்பட அமுது அருந்தியதால்
மாண்டுவிட்டார்கள்
இங்கே வந்துவிட்டார்கள்”
என்றார் குப்தர்.
அரசு அமுத கடைகளில் அருந்தாமல்
வெளியே ஏன் வாங்கிக் குடித்தீர்கள்?
என்று கேட்டார் எமதர்மராஜா
“அங்கேதான் அருந்தினோம் ராஜா
அங்கேதான் கலந்துவிட்டார்கள்
கள்ளச்சரக்கை கயவர்கள்” என்றார்கள்
அத்தனைபேரும் கோரசாக.
தலையை தடவிக்கொண்டு.....
“தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது”
என்று எழுந்தார் எமதர்மராஜா.