ஒரு விதவையின் ஆசை

என் வசந்த வானிலே
வெண்ணிலவு இல்லை....
அன்பே நீ வந்து முகம்
கட்டுவாயா..?
என் மாவிலை வாசலில்
கோலங்கள் இல்லை ...
அன்பே உன் பாதக்கோலம்
பதிப்பாயா ..?
என் அலங்காரக் கூந்தலில்
புஷ்பங்கள் இல்லை...
அன்பு உன் புன்னகை பூக்களை
சூட்டுவாயா
என் சங்குக் கழுத்தினில்
தாலி இல்லை..
அன்பே உன் இரு கரங்களில்
அணிவிப்பாயா..?
என் இதய மாளிகையில்
மன்மதன் இல்லை...
அன்பே நீ வந்து குடியிருப்பாயா..?
என் காதல் பொத்தகத்தில்
கவிதைகள் இல்லை ...
அன்பே நீ வந்து கவிதைகள்
ஆவாயா ..?

எழுதியவர் : suguna (3-May-12, 3:44 pm)
பார்வை : 382

மேலே