காலை
மயங்கிய பறவைகளின் விளையாடலும்
தூங்கிய மரங்களின் தலை ஆடலும்
மௌனமாய் தோன்றி தன்
வெளிச்சத்தை புவியுள் ஊன்றும்
மலரும் இந்த காலையில்தான்......
மின்சார
செயற்கை ஒளி மறைந்து சூரிய
இயற்கை ஒளி இருள் நீக்குதே.....
இரவின் நிசப்தம் களைந்து -பாடும்
பறவையின் சப்தம் பரவசமூட்டுதே!...
அழகிய இதயங்களில் ஆன்ம
ஒளி பெருகி
மலரும் இந்த காலையில் மனித
மனமும் மகிழட்டும் -நட்பு
மனங்களையது பயிலட்டும்.......