எம்மினத்துக்காய்

ஆயிரம் தீபங்கள் ஏற்றுகிறோம்-எமக்காய்
ஆருயிர் நீத்த எம் தோழருக்காய்-எங்கள்
ஈழ மண்ணின் அவலங்களை நாங்கள் கூறுகிறோம் கேட்க யாருமில்லை
அடைக்கலம் கேட்டோரை அழித்தவன் -எதிரி
ஆயுதம் கொண்டு படுகொலை செய்தவன்பாவையர் குழந்தையர் என்பதும் பாராமல்
பயங்கர குண்டால் தமிழரை அழித்தவன்

பயம்கரம் கொண்ட இனவாதிகளால்
ஈழ தமிழரெல்லாம்
மண்ணில் புதைன்தனர் பார்
காலங்கள் தோறும் ஈழம் எரியுதடா
இங்கு உதவுவார் யாரும் இல்லயேடா
ராணுவத்தின் ரவை மார்பை கிழித்தது
எம்மின பாவையர் மானம் அழித்தது
பச்சிளம் குழந்தைகள் பசிக்காய் அழுதிட
பாவிப் படைகளோ அவர்களை பார்த்து ரசித்தனர்

எழுதியவர் : (18-May-12, 2:13 pm)
சேர்த்தது : mannan
பார்வை : 164

மேலே