நட்பு மலர்கள். .- பொள்ளாச்சி அபி

நட்பு மலர்கள்
நறுமணம் வீசும்போது
மனதினில்
மனிதநேயமே முகிழ்க்கிறது.!

உறவுக்கண்ணிகள்
ஒருங்கிணையும்போது
பிரிவுத் துயர்கள்
சிறை வைக்கப்படுகிறது.
----------

இறந்துபோன நண்பனின்
கைபேசி எண்
என்னிடம் இருக்கிறது
அதை அழிப்பதா.?
வைத்துக் கொள்வதா..?
ஊசலாடுகிறது மனம்.!

---------------

கண்கள் இல்லாத
மனிதனுக்கும்
நண்பன் இல்லாத
மனிதனுக்கும்
இந்த உலகம் என்றுமே
இருட்டுதான்.!
----------
காயம் ஆறும் வரைக்கும் வலிக்கும்
காதல் சாகும் வரைக்கும் வலிக்கும்
நட்பு மட்டுமே
இறந்த பின்னும் துடிக்கும்.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (3-Jun-12, 9:31 pm)
பார்வை : 556

மேலே