மங்கை
மங்கை மனம்
மங்கைக்கு புரியுமாம்
மடையர்கள்!
அம்மி அரைக்கவும்
அடுப்பு ஊதவும்
பெண்கள்
சபிக்கப்பட்டபோது....
இருளுக்குள் தவித்துக்
கொண்டும்
மயங்கி மயங்கி
அலைபாய்கின்ற மனசினால்
நிம்மதியொன்றில்லை
சிலைகளுக்குப் பின்னால்
கடவுளைத் தேடியும்
சேலைகளுக்குப் பின்னால்
பெண்மையைத் தேடியும்
புரிந்து கொண்டது
எதுவுமில்லை!