நீல நீருக்கு அப்பால் வெள்ளை மணலுக்கு அப்பால்....
நீலநீருக்கு அப்பால்
எதையும் நான் காணவில்லை
காண்பது ஒன்றைத் தான்
நீலவானம் கடலை
முத்தமிடும் அழகைத்தான்
தொடுவானத்தைத் தான்
வெள்ளை மணலுக்கு அப்பால்
எதையும் நான் காணவில்லை
காண்பது ஒன்றைத்தான்
முடிவற்ற பாலை பாதைகளையும்
கானல் நீரையும் ஒட்டகக் கூட்ட்டத்தின்
பாதச் சுவடுகளையும்தான்
இந்த நெடிய சோர்வுமிக்க வாழ்க்கையில்
எதையும் நான் காணவில்லை
காண்பது ஒன்றைத்தான்
முடிவற்ற சிந்தனைகளையும்
தெளிவற்ற தரிசனைத்தையும்தான்
----கவின் சாரலன்