காதல தந்த வலி !!!

ஐம்பொறிகள் அத்தனையும்
தீப்பொறியை கக்குகின்றன...!

மோகங்கள் அத்தனையும்
சோகங்களின் முகவரியில்
அகதியாய் தஞ்சம் !

திறப்பில்லா பூட்டுகளால்
அடைக்கப்பட்ட அறைக்குள்
என் கனவுகள் இன்னும்
சுகமாய் உறங்கிக்கொண்டிருகின்றது..!

பிரசவிக்க முடியாத குழந்தையாக
நம் வாழ்க்கை ஆன பின்பும் -
கருவுற்ற காதல் குழந்தை
உதைத்துக்கொண்டே இருக்கின்றது
இதயத்திற்குள்...!

பத்து மாதம்
பொறுத்துக்கொண்டால்
தீர்ந்து விடும் பிரசவ வலி !
எத்தனை ஜென்மம்
எடுத்த பின்பு தீருமடி - இந்த
காதல் வலி ?

சரித்திரம் படைத்தது
காதல் !
தரித்திரம் பிடித்தது
வாழ்க்கை !!!

இருக்கும் இடம் மறந்து
நான் அழுதேன்
குழந்தையாக...!
இலக்கணங்கள் மறந்து
என் பேனை அழுகிறது
கவிதையாக !!!

எழுதியவர் : KS Kalai (7-Jul-12, 7:16 pm)
பார்வை : 642

மேலே