பத்தாம் பிறையே நீ வருக வருக வருக...!

(என் நண்பன் கலாபிரியன் அவர்களின் பத்தாம் பிறையை வரவேற்று எழுதிய கவிதை இது...)

பத்தாம் பிறையே
பகலில் வந்த ஞாயிறே
இத்தாய் இனிதாய்
ஈன்ற சிறு பிறையே
சத்தாய் வாழ்க்கைக்கு
சக்தியை சாரமாய்
வித்தாய் வழங்கிடுவாய்
வியக்க வைக்கும் வின்மதியே..
கொத்தாய் மகிழ்சிதனை
கொடுத்திட வந்தவளே
அத்தாய், முகம் கண்டு
அல்லிப்பூ பூத்திடுமே
சித்திரமே, முத்தினமே,
சுப்பிர மணியின் ரத்தினமே...!
அற்புதமே, அரும்பிறையே..!
அம்பலத்தான் விருப்பொருளே ..!
இப்பரத்தில் அப்பரத்தில்
இசைக் கலாவின் நற்கரத்தில்
பொற்பதம் வைத்த நற்பதம்
பத்தாம் பிறையே நீ
வருக வருக வருக...!

எழுதியவர் : பசுவைஉமா (14-Jul-12, 12:34 am)
பார்வை : 373

மேலே