விட்டு விடுதலையாகி..!

எனது இறந்தகாலமிங்கே
சிலரறிவார்..!
எனது எதிர்காலத்தை
யாரறிவாரோ.?
எனது நிகழ்காலத்தை
உங்களோடு கொஞ்சம்..,

எனது சுவாசத்தையும்
அதிகாரத்தால் கட்டுப்படுத்திய
எனது சிறைவாசம்
முடிந்தது..!

விட்டுவிடுதலையாகி..
ஒரு சிட்டுக்குருவியாய்
உங்களைத் தேடி..!
கவிதைகள் இல்லாத
தேசத்திலிருந்து
உங்கள்
கவிமழையில் நனையவும்
கருத்தருவியில் குளிக்கவும்
வந்திருக்கிறேன் நான்.!
நேசமும் பாசமுமாய் உம்மிடம்
நிறைந்தொழுகும் அன்பில்
எனைக் கரைத்துவிடவே
ஆசையெனக்கு...!

இரும்பாய் இறுகிய-என்
இறந்தகாலத்தை,
புதைத்துவிட உம்துணை
தேவையெனக்கு..!

அன்பினால் வளையுங்கள்
நான் நாணலாவேன்..!
பாசத்தால் போரிடுங்கள்..
எனதுவெற்றியெலாம்
உம் காலடியில்..!
வாழ்க உமதன்பு..!
வளர்க உம்நேசம்..!

கற்றதெல்லாம் வெறும்கணக்கு
ஆதலால்..
கவிபுனையத் தெரியாதெனக்கு..
ஆனாலும்..
கவிதையோடில்லை பிணக்கு.!

எழுதியவர் : சிநேகமுடன் ஸ்நேகா (20-Jul-12, 5:30 pm)
பார்வை : 408

மேலே