நீயே என் உயிர்த்தோழி
அழுகின்ற வேளையில்
ஆறுதலாய் இருப்பாய் நீ!
சோகத்தில் தவிக்கையில்
சுகமாய் பேசுவாய் நீ!
பள்ளிவிட்டு வந்ததும்
பாசத்தில் சோறூட்டுவாய் நீ!.
செல்லமாக எனை அடித்தாலும்
அன்பே என்று
அணைத்துக்கொள்வாய் நீ!
பத்துமாதம் சுமந்து
பாலூட்டு சீராட்டி
பக்குவமாய்
பாதுகாத்தாய் நீ!
அம்மா நீ
என் உயிரைப்
பாதுகாத்து வாழ்வதால்
நீயே
என் உயிர்த்தோழி....!