நீ இன்னும் எனக்கு குழந்தைதான்
தேன் சிந்தும்
இதழ்களால் நீ
முத்தமிடும்போது
வரும் வாசம்!
பிஞ்சு விரல்களா
தீண்டி விளையாடும்போது
கிடைக்கும் இன்பம்!
உன் குட்டிகால்களால்
எட்டி உதைக்கும்போது
கிடைக்கும் இதம்!
என் அருகில் நீ
புரண்டு புரண்டு
படுத்துத் தூங்கும்போது
கிடைக்கும் சுகம்!
பஞ்சு போன்ற
உன் கூந்தலை
வருடிவிடும்போது
கிடைக்கும் ஆனந்தம்!
இவையெல்லாம் சொல்லும்
நீ என்றும் எனக்கு
பால் மனம் மாறாத
பச்சக் குழந்தைதான் என்று!