பாரத மணிக்கொடியே வணக்கம்

மேவிய ஆறுகள் பலவும்
மூன்று வண்ணங்களாய்
தாவிப் பாய்ந்திடும் அழகினைப் போல்
காவியின் தூய்மையிலும்
வெண்மையின் அமைதியிலும்
பசுமை எழிலினிலும்
பட்டொளி வீசிப் பறந்திடும்
பாரத மணிக்கொடியே! -நின்னை இந்த
சுதந்திர நன்நாளில் வணங்கி நின்றோம்
இந்த ஏழையின் வாசலிலும்
ஒளி வீசிடப் பறந்திடுவாய் இன்றுமுதல்.

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Aug-12, 10:25 am)
பார்வை : 143

மேலே