பிரிவு
பிரிவினும், பிரிவின் வலி கொடியது....
பிரிவது தாயாயின்,
பதறும் உள்ளம்....
அறியாத வயதிலும்,
அரவணைத்தால் அன்று....
பிரியாது நிற்க முடியவில்லை,
அதனை எற்ப்பாயாக இன்று....
தோழ்கள் கொடுத்து,
தோழமையில் நின்றோம்....
தொழில்கள் வேறென்று ஆனபின்,
தொலைவு நம்மைப் பிரித்திடுதே....
காதல் என்றொரு பாவம் புரிந்தேன்,
அவள் பிரிவு எனும் பாடம் அறிந்தேன்....
என் உயிரானது மாண்ட போதும்,
அவள் பிரிவின் வலி மாலாது என்றும்....
பிரிவெனும் சொல்லைக் கேட்டதுண்டு,
அதன் விளக்கம் தேடிப் பார்த்ததில்லை....
பழக்கம் கொண்டேன் அவளுடன் இன்று,
விளக்கி விட்டாள் பிரிவின் பொருளை....!!!!