நீயே கடவுள் ...!!!

கருவறையில் மிதந்து
வலி கொடுத்து
விழி திறந்து
விழுந்து
தத்தி தத்தி
மெல்ல எழுந்து
நடை கற்று
மொழி தெரிந்து
வழி தேடி
மனம் வளர்ந்து
பருவம் வந்து
மணம் புரிந்து
கரு கொடுத்து
உரு மாறி
தோல் சுருங்கி
தலை நறைத்து
மூபெய்து
நோய் தொற்றி
உடன் வந்த
சொந்தம் மறந்து
உடல் சாய்ந்து
உயிர் பிரிந்து
உறவு தூக்கிச்சென்று
கல்லறையில் இட்டு
மணல் மூடி
சகாப்த்தம் முடியவா
பிறந்தாய் மனித நீ ???!!!

ஆச்சிரியங்கள் பல
உன்னுள் அடக்கி
அற்புதமாய் படைக்கப்பட்ட
படைப்பு நீ...!!

அன்பு ,பாசம்
நட்பு ,காதல்
என எத்தனை
ரசனைகள் உன்னுள்..!!
.
அன்பால் மட்டுமே
நீ உயர்ந்தால்
நீயே கடவுள்....!!!

அன்னிநிலை
உணர்ந்தால்
மரணம் வென்று
வாழ்ந்திடுவாய்
இவ்வுலகில் ....!

என்றும்...என்றென்றும்..

எழுதியவர் : ஜீவன் (10-Sep-12, 4:45 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 211

மேலே