கூடங்குளம் எம் குடியழிக்கும் வட குலத்தின் திட்டமிடல்

இனியும் அழியமுடியாது
அலையாய்
எழுக ,
அலை மேல் எழுக !
அகிம்சை அடையில் கிடக்கட்டும்
மாற்றுவழி தெரிக !

எம் நிலத்தில் அணுவுலை பிறக்குமெனில்
படை கூடி களம் காண்போம் ,
கடலாகி எழுந்தடிபோம்,
உயிர் விட்டு
எம் சந்ததியின் உயிர் காப்போம் .
எம்முரிமை மறுக்கப்படல்
அரச பயங்கரவாதம்,
ஒளிக்காக
எம் உயிர் கேட்கும் பாவிகள் அழிக!

புகுசிமாவில் அணுவின் அகோர முகம்
இன்னும் தெரிகிறதே !
புதுப் புகுசிமா இங்கு ஏன் ?

அம்முவின் ஆளும் கட்சிக்கு
அணுவுலையின் அழிவு தெரியாது !
அம்முவே
உங்கள் ஆட்சியை விட
பல மடங்கு அழிவு
அணுவுலை.. . .

துப்பாக்கி ஏந்தி நிற்கும்
காக்கி சட்டை
காரர்களுக்கும்
அணுவின் விளைவு சொல்க !
காக்கி சட்டை
கழட்டி எறிவார் ...
கடலினிலே கை கோர்ப்பார்
அப்படியும்
இணையாதோர் ஆளும் வர்க்கத்துடன்
அடையாரில் மருந்தெடுப்பர்......

அணுவுலைக்கு கொல்லி வைத்தலே
எம்முயிர் காக்கும் கடமை . . .

ஆளும் வர்க்கமே
நீ
அழிவதென்றான பின்
உழைக்கும் வர்க்கத்தை சுடுவதேயுனக்கு
தெரியும் !
சுடு சுடு சுடு . . . . . .
அணுவுலைக்கு முன்னரே உயிர் பறி!


உலகமயம் என்று உளறாதீர்
நாராயணன்களே!
நாம் கலக மயமாகிவிடுவோம் . . . .


எப்பவோ சுடுகாடு போவோம்
என்பதற்காய்
வீட்டிற்குள் சுடுகாடு கட்டவா முடியும் !


எழுக தமிழா!
எழுக
கூடங்குளம் எம் குடியழிக்கும் வட
குலத்தின் திட்டமிடல்,
புரிந்துகொண்டு எழுந்து வருக
இடிந்தகரை மண்ணுக்கு-இல்லை
அழிந்து கொண்டு எரிந்து சாக
அணுவுலை மின்னுக்கு !

எழுதியவர் : கவிஞர் அங்கையற்கன்னி (13-Sep-12, 11:26 pm)
பார்வை : 192

மேலே