இறகை விரித்த பறவை
இறகை விரித்த பறவை
இனிய வானத்தை புரிந்து கொண்டது
அன்பினை புரிந்த மனிதன்
அழகிய ஆண்டவனை அறிந்து கொண்டான்
குறுக்கிக் கொள்வது என்பது
குணமில்லை என்றறிந்தான்.......
குதூகலமாய் வாழ்ந்து மகிழ்வதே....
குறையிலா சொர்க்கம் என்றுணர்ந்தான்.....!