நானும் ஒருத்தி.
இடத்திற்கும் சூழ்நிலைக்கும்
தகுந்தவாறு தன்னை
மாற்றிக்கொள்ளும்
மாயம் தெரிந்த உயிர்
பச்சோந்திகள் மட்டுமல்ல....
மனிதனும் தான்...
பச்சோந்தி உடலை
மாற்றிக்கொள்கிறது...
மனிதன் உள்ளத்தை
மாற்றிக்கொள்கிறான்...
இன்று இந்தவரிசையில்
நானும் ஒருத்தி.