மரண கிணறு ஆடுபவர்

காட்டு புலி கரடி
சீரும் சிங்கம்
பிளிரும் யானை
எல்லாம் வித்தைகள்
செய்யும் !
அவனின்
சிருதடிக்கு
கட்டுப்பட்டு ஆடும் !

கைகொட்டி சிரிப்போம்
நாமும் !
சர்கஸ் வித்தைகள்
பார்த்து
சந்தோசம் கொள்வோம் !

அங்கொரு மனிதன்
அழமான் கிணறு
ஒன்றில்
அந்தரத்தில்
பைக்கில் சுத்துவான்
அதையும் பாப்போம்
அதிசயிப்போம் !

அனாலும் அவன் வாழ்க்கை
தினம் தினம்
மரண கிணறுதான் !
நாம் அறிவோமா ?
அனுதாபம்தான்
கொள்வோமா ?

ஐந்துருபாய்க்கு
அரியகாட்சியை
அந்த மகிழ்வு
நமக்கு !

அன்றாடம் வயிறுக்கு
உயிரை
பணயம்
வைக்கும் நிலை
அவர்க்கு !

கரணம் தப்பினால்
மரணம் !
அவர் ஆடும் வரை
அவர் உயிர் வாழ
உணவின் தேவை
உள்ளவரை !

எழுதியவர் : (30-Sep-12, 8:22 pm)
சேர்த்தது : m arun
பார்வை : 138

மேலே