வெள்ளப்பெருக்கு !

எங்கு நோக்கினும் அலறல் சத்தம்
என்திசையிலிருந்தும் அடித்துச்செல்லப்படும் மக்கள் !
தண்ணீரில் இழுத்துச்செல்லப்படும் பொருட்கள்
வயதான மூதாட்டியும் வயதை எட்டாத குழந்தையும்!
மென்மை மனம் கொண்ட பெண்மையும்
கண்ணென காக்கும் ஆடவனும்
பாரபட்சமில்லாமல் அடித்துச்செல்லப்படும் நிலை
பார்த்துவிட்டு கதறினேன் !
இயற்க்கை தாயே இவற்றின்மூலம்
நீ அடையும் மகிழ்ச்சிதான் என்ன ?
எத்தனை பேர் அலறல் சத்தம் உன்
செவிக்கு எட்டவில்லையா ? பதில் வந்தது
புத்திகெட்டு பேசாதே மதியிழந்த மானிடா
நான் ஓடும் இடங்களில் வீட்டை கட்டி தடை போட்டதும் ,
சென்று தேங்கும் குளம் வாய்க்காலைதரைமட்டமாய் நிரவி இடமாக மாற்றியதும்,
ஆறாய் இருந்த என்னை ஓடையாய் குறுக்கி
ஆக்கிரமித்ததும் யார் செய்தது ...
உன் மகிழ்ச்சியால் அறியாமையில் நீ ஏற்படுத்தினாய் மக்கள்தொகைபெருக்கம்
அதன் விளைவாய் இன்று என்னுள் இந்த வெள்ளப்பெருக்கு !
(மனிதர்களாகிய நமக்கு சிந்திக்க கூடிய சக்தி உள்ளது சிந்திப்போம் செயல்பட்டு நம் நாட்டையும் முன்னேற்றுவோம் )