உன்னை நினைத்து நான்

தன் நிழலை தானே சுமக்கின்ற
தஞ்சை கோபுரம் போல் நான்
உன்னை சுமப்பேன்...
யார் கண்ணாவது பட்டு விடுமோ
என்கிற பயத்துலேயே
எல்லோரும் இருக்கையில்
நான் மட்டும்
எப்போதும் என் மீது
உன் கண் படும் என்று
ஏங்கி கொண்டிருக்கிறேன்...
உன் வருகை காகவே
தினமும் காத்திருக்கிறேன்-நீயோ
என்னை கடந்து போவதற்காகவே
வருகிறாய் ...
எப்போதும்
சுடிதாரிலேயே பார்த்த உன்னை
முதல் முறை சேலையில் பார்த்த போது...
அய்யோ அந்த சேலை
உன்னை கட்டிக்கொண்டிருக்கிறதே!!!