2.எழுத்தால் மலர்ந்த சொந்தங்களே.! - பொள்ளாச்சி அபி

வண்ண வண்ணமாய் நிறம் காட்டும்
பல வாசம்கொண்டதாய் குணம் காட்டும்
எண்ணம் நிறைக்கின்ற கருத்துக்களால்-இங்கு
எழுத்தால் மலர்ந்த சொந்தங்களே.!

கண்ணில் இதுவரை கண்டதில்லை
காதால் பேச்சினை கேட்டதில்லை..,
ஒன்றாய் பிறந்த சொந்தமில்லை..
இனியும் பிரிகின்ற எண்ணமில்லை.!..

உண்மை வழிகின்ற கருத்துக்களால்
உலகை மாற்றும் சக்திகளே..! - வண்ண வண்ணமாய்

தேசம் என்பது நம்வீடு..
மக்கள் அனைவரும் நம்சொந்தம்..!
சாதிகள் மதங்கள் ஒழிகின்ற
காலத்தை கவிதையில் வரவழைப்போம்.

கடமை நம்மை அழைக்கின்றதே..
உழைப்பைக் காலம் கேட்கின்றதே..! -வண்ண வண்ணமாய்

புதுவை மண்ணில் நிகழ்கின்ற
புலமை எழுத்தில் தெறிக்கின்ற
புத்தகம் வெளியிட வாருங்களேன்
புதிய திசைகளைக் காட்டுங்களேன்..!

வாழ்க வாழ்க நீங்கள் வாழியவே
வாழ்க வாழ்க நீங்கள் வாழியவே.! -வண்ண வண்ணமாய்..

அன்புடன் அழைக்கிறோம்-பொள்ளாச்சி அபி

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (18-Nov-12, 4:18 pm)
சேர்த்தது : பொள்ளாச்சி அபி
பார்வை : 141

மேலே