2.எழுத்தால் மலர்ந்த சொந்தங்களே.! - பொள்ளாச்சி அபி
வண்ண வண்ணமாய் நிறம் காட்டும்
பல வாசம்கொண்டதாய் குணம் காட்டும்
எண்ணம் நிறைக்கின்ற கருத்துக்களால்-இங்கு
எழுத்தால் மலர்ந்த சொந்தங்களே.!
கண்ணில் இதுவரை கண்டதில்லை
காதால் பேச்சினை கேட்டதில்லை..,
ஒன்றாய் பிறந்த சொந்தமில்லை..
இனியும் பிரிகின்ற எண்ணமில்லை.!..
உண்மை வழிகின்ற கருத்துக்களால்
உலகை மாற்றும் சக்திகளே..! - வண்ண வண்ணமாய்
தேசம் என்பது நம்வீடு..
மக்கள் அனைவரும் நம்சொந்தம்..!
சாதிகள் மதங்கள் ஒழிகின்ற
காலத்தை கவிதையில் வரவழைப்போம்.
கடமை நம்மை அழைக்கின்றதே..
உழைப்பைக் காலம் கேட்கின்றதே..! -வண்ண வண்ணமாய்
புதுவை மண்ணில் நிகழ்கின்ற
புலமை எழுத்தில் தெறிக்கின்ற
புத்தகம் வெளியிட வாருங்களேன்
புதிய திசைகளைக் காட்டுங்களேன்..!
வாழ்க வாழ்க நீங்கள் வாழியவே
வாழ்க வாழ்க நீங்கள் வாழியவே.! -வண்ண வண்ணமாய்..
அன்புடன் அழைக்கிறோம்-பொள்ளாச்சி அபி