முதல் இரவு (மனைவி தாசன்) 555
முதல் இரவு...
ஊர் எல்லாம் பார்க்கும் படி
அவளுக்கு மாலையிட்டு...
நான் மட்டும் அவளை காண
தாழ்ப்பாளிட்டு...
கட்டிலிலே காத்திருந்தேன்...
மெல்ல மெல்ல நடந்து
என் அருகே வந்தவள்...
என் முன்னே கைகளில்
வைத்திருந்த...
பல் செம்பினை
நீட்டினாள் வெட்கத்தில்
தலை குனிந்து...
அவள் கைகளை தொட்டு
பால் செம்பினை வாங்கும் நேரம்...
ஒரு புறமாக முகம்
திருப்பி புன்னகைத்தாள்
வெட்கத்துடன்...
அவள் மெல்லிய பட்டு
புடவையை நான் இழுக்க...
அவள் வெட்கத்தில்
கன்னங்கள் சிவந்தது...
அருகில் இருக்கும்
ஆப்பிள் சிவப்பா...?
இவள் கன்னங்கள் சிவப்பா...?
பால் செம்பினை வாங்கவா...?
இவள் புன்னகையில்
கன்னக்குழியில் பல்லாங்குழி ஆடவா...
திகைத்து நான் இருக்க...
டேய் என்றாள்...அவள்...
திகைத்து நிமிர்ந்தேன்...
அன்று முதல் அவள் பேச்சிக்கு
மறுத்து பேசாதவனாய்
இன்று வரை...
தாசனானேன்...
கண்ணனுக்கோ
காளிக்கோ இல்லை...
என் மனைவிக்கு...
மனைவிதாசனாய் நான்.....