ஆனந்தப் பயணம்

இது என்ன ?
வைக்கோல் லாரியா ?
கம்பி ,சட்டம், திருகாணி
என்று
கிடைத்ததைப் பற்றிக் கொண்டு...

ஒரு ஆள்
இன்னொரு ஆளை
அணைத்துக் கொண்டு
கீழே விழாமல் ...

விரல் விண்டுவிடும் போல
காலில் மிதிக்கிறது
பூட்ஸ்கள் ,செருப்புகள் .கூடைகள் ...
விரலா ? சதைக் குழலா ?

வதைகள் தெரியாது
பெட்ரோலுக்கும்
டீசல் எண்ணைக்கும்
ஆக்சிலேட்டருக்கும்
உயிருள்ள வைக்கோல்கள்
ஏற்றிச் செல்லும்
பேருந்துகளின்
அழுகை சத்தம் ..

சந்தைக்குப் போகிறது
சட்டிப் பானை
வண்டிகளாக ..

மனிதர்கள்
ஒண்டல்கள்
முதுகெல்லாம் ...

ஆனந்தப் பயணத்தில் !!!

எழுதியவர் : செயா ரெத்தினம் (24-Nov-12, 2:21 am)
பார்வை : 325

மேலே