அமைதி பூப்பதெங்கே?
கல்வந்து வீழ்ந்து விட்ட
..கண்ணாடி யாச்சு மனசு
புல்பூண்டு படர்ந்து விட்ட
..புதராச்சு சுமைகள் சூழ்ந்து
சொல்கொண்டு சுட்ட காயம்
..சூசியபட்டு வலிக்க லாச்சு
வில்பட்டு வீழ்ந்த மானாய்
..விதிவீழ்த்தி சிரிக்க லாச்சு .
பணமொன்றே வாழ்க்கை என்று
..பட்டபாடு வீணு மாச்சு
குணங்கொண்டு வந்த பேர்கள்
..கொட்டுகின்ற தேளு மாச்சு
ரணம்கொண்டு துடிப்ப தனால்
..ராத்திரியின் தூக்கம் போச்சு
உணர்கின்ற வேளை வந்த
..உதயமது அஸ்தமன மாச்சு
பூட்டிட்ட நெஞ்சி னுள்ளே
..புலம்பியழும் துயரி னோசை
கேட்பதற்கு யாரு மின்றி
..கேலியாகி விட்ட தாலே
வாட்டுகின்ற வாழ்வை நித்தம்
..வற்றிவிட்ட குளத்து மீனாய்
ஆட்டிவைக்கும் இறைவா நீசொல்
..அமதியது எங்கே பூக்கும்
..