கவி எழுதும் கரங்களின் கதைகள்

எத்தனையோ எண்ணங்கள்
என்னில் புதைந்த
வண்ணங்கள் சோகரசம்
ததும்பிய
இதயங்கள் சொல்ல
முடியா சோகங்கள்
ஆற்றமுடியா
வேதனைகளை
குறைக்க ...வித்திட்ட
மயானங்கள்
இத்தனைக்கும்
மருந்து ...மயிலிறகை
தடவிய உன் அழிந்து
போக நினைவுகள்

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : இல்முன்னிஷா நிஷா (2-Dec-12, 8:06 pm)
சேர்த்தது : ilmunnisha3
பார்வை : 124

மேலே