இன்று பறிபோனது (குறுங் கவிதைகள் )
காவிரியை
கண்ணகியாக்கியது
கர்நாடகம் !
அகத்தியன்
கைசாடி மட்டும்
நிரம்பி வழிகிறது !
கல்லெல்லாம்
சிலையானது
தூரிகையாலே !
கண்ணீர் சிந்துகிறது
குகை ஓவியங்கள்
சிற்றன்னவாசலில் !
பனியில் நனைந்த
பன்னீர் பூக்கள்
கண்ணீரானது !
சிற்பியினால்
சிலையானது
களிமண் !
குமுதம் விகடன்
கணினிக்குள்ளே
இன்றைய அம்மா !