ஒரு பொறி !

ஒரு பொறி !
ஒரு முகில் !
ஒரு காற்று!

வானைப் பார்த்து
உருகும் வெப்பம்
ஊமைப் புழுக்கமாக ..!

சுடர் பொறிகள்
கொட்டித் தீர்க்கின்றது
மழை ஆவேசம்
வந்தார் போல ....!

பெய்த மழை
ஈரத்தில்
மின்னுகிறது
பசுமையாக ...!

பூரிக்கின்றது
விண்மணிகள்
முகம் காட்டி
பசுமை கண்டு ..!

ஒரு பொறி
தெரித்தால்
சூறையாடித்
தீர்க்கும்
காற்று
ஊர் முழுதும் ...!!

எழுதியவர் : செயா ரெத்தினம் (10-Dec-12, 1:05 pm)
பார்வை : 90

மேலே