கற்பின் கவசம் = அழுக்கு???.... !!!!!!!!.....
ஊசிமணி பாசி விற்கும்
நரிக்குறவர் நாங்கள்
ஊரும் இல்லை வீடும் இல்லை
எங்கள் கதைக்கே ளுங்கள்....
அப்பழுக்கு நெஞ்சிலில்லை
சுத்தமான மனசு
நடைபாதையோரம் வாழும்
எங்கள் வாழ்க்கை ஒரு தினுசு...
நாசி மூடி தூர(ம்) ஓடும்
நல்லவரே கொஞ்ச(ம்) நில்லும்
பெண்கள் அழுக்குடம்பு காரணத்தை
கேட்டுவிட்டுச் செல்லும்...
பகலினிலே வாழும் வாழ்வில்
பங்கம் ஏதும் இல்லை
பாழும் இரவினிலே சாலையோரம்
படு பாவிகளின் தொல்லை....
இள(ம்) வயது பெண்களெல்லாம்
நாளும் குளிப்பதில்லை
குளித்துவிட்டால் இரவினிலே
கற்பு போகும் கொள்ளை..
நான்கு சுவருள் வாழ்க்கை என்றால்
காணும் வாழ்க்கை சொர்க்கம்
நடுத் தெருவினிலே வாழுவதால்
நாளும்... நாளும்... நரகம்...
அமைச்சுப் பணியில் உள்ளோரே
செவி கொடுத்து கேளும்
அரசு கொஞ்சம் மனசு வைத்தால்
எங்கள் சங்கடங்கள் தீரும்...
****************************