!!!====(((தோழமைகளே)))====!!!

தோழர்களே... தோழிகளே...
பொங்கல் கவிதை போட்டிக்கு தாங்கள் அளித்துவரும் ஆதரவு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது,
தோழமைகளுக்கு ஒரு முக்கிய வேண்டுகோள், தயவு செய்து நீங்கள் உங்கள் பதிவுகளை பொங்கல் போட்டிக்காக பதிவிடும் முன்பு அறிவிப்பில் கூறியபடி கவிதை இருக்கிறதா? அல்லது விதிமுறைகளை மீறி இருக்கிறதா என்று ஒரு முறை மீளாய்வு செய்து பிறகு பதிவிடுமாறு திருவிழா குழுவும், நடுவர்கள் குழுவும் கேட்டுகொள்கிறது,
அறிவிப்பின்படி கவிதை 24 வரிகள் இருக்கவேண்டும் என்பது அனைவரும் அறிந்த விடயமே ஆனாலும், படைப்புகள் 30 , 40 என அதிகமான வரிகளை கொண்டு நிறைய பதிவாகிகொண்டு இருக்கின்றன, இது விதிமுறைகளுக்கு மீறிய செயலாகும், தயவு செய்து இனி பதிவு செய்யும் கவிதைகளை 24 வரிகளில் மட்டுமே இருக்கும்படி வாக்கியத்தை அமைத்து எழுதுங்கள் உங்களால் முடியும்.

விதிமுறைகளுக்கு மீறிய அதிகமான வரிகளைகொண்ட படைப்புகளை நடுவர்குழு நிராகரிக்கும் என்பதை கருத்தில் கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

ஒரு வரியில் ஒரு சொல் மட்டுமே இருந்தாலும்கூட அது ஒரு வரி என்பதே கணக்காகும்.

தயவு செய்து அறிவிப்பில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை கடைபிடியுங்கள்.

தோழமையுடன்
கவிதை திருவிழா குழு.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (2-Jan-13, 2:40 pm)
பார்வை : 102

மேலே