வை ச பாலகிருஷ்ணன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வை ச பாலகிருஷ்ணன்
இடம்:  திருச்சிராப்பள்ளி
பிறந்த தேதி :  27-Aug-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Nov-2018
பார்த்தவர்கள்:  350
புள்ளி:  9

என் படைப்புகள்
வை ச பாலகிருஷ்ணன் செய்திகள்
வை ச பாலகிருஷ்ணன் - நூல் (public) சமர்ப்பித்துள்ளார்
28-Jan-2021 7:18 pm

பாலாவின் தமிழ்விருந்து: கவிதைத்தொகுப்பு

இந்நூல் பழந்தமிழ் எழுத்து நடையில் எழுதப்பட்டுள்ளது. இது எனது முதல் முயற்சியாகும். இக்காலத்திற்கு ஏற்றக் கருத்துக்களை தொன்மையான கவிப்புனையும் முறையில் எழுதும் என் விருப்பத்தின் விளைவு. வாழ்த்து, அகஉணர்வு, தற்கால சூழ்நிலை, பொதுத்தன்மை, அறவுரை என ஐந்துபிரிவுகளை உள்ளடக்கியது.

Website: www.amazon.in/books
புத்தகத்தின் பெயர்: பாலாவின் தமிழ்விருந்து கவிதைத்தொகுப்பு
English Title: Balavin Thamizhvirundhu
ஆசிரியர்: வை ச பாலகிருஷ்ணன் (V S Balakrishnan)

Amazon தளத்தில் தங்களது மேலான விமர்சனங்களைப் பதிவிடவும். மற்றும் நூலின் தரஅளவு (Rating in the number

மேலும்

வை ச பாலகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2019 1:08 pm

The Unmisted LoveA visibly disturbed Dorothy hesitantly asked Edward in a low voice, "Honey, we have been dating for almost two years but you haven't spoken a word about your commitment so far," spilling her heart out unable to hold it back anymore.
Upon hearing this, a broad smile bloomed on his charming face, the very smile that was once enough to fulfill every emotional need of that gorgeous woman but has become increasingly insufficient to soothe her troubled mind battered by the ever-growing turbulent thoughts, the reasonable concerns of a thirty-year-old woman about the uncertainty of he

மேலும்

வை ச பாலகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Jul-2019 6:10 pm

ஆங்கே விரிகடல் மேல்பரப்பு வீசு வெள்ளலை
திரண்டு உயரெழ நிலைகெடும் மரக்கப்பல்
தன்னுள் உறைபொருள் மக்கள் யாவர்நலம்
பிழையின்றித் தான்காத்துப் பேரிடர் உடன்தவிர்க்கும்
ஈண்டு ஆழ்கடல் நீருலகில் ஆயிரம் எழில்மீன்கள்
சூழ்ந்தமையச் சுற்றத்துடன் வாழ்எம் வீடதனில்
பசியுணர்வு அகம்நிறைக்க உயிர்நேயம் உணர்வகல
ஊனுண் விருப்புற்றுக் கூர்வேல் கரம்வீச
உடல்கிழிய வழிகுருதி நீர்க்கலந்து சிவந்தமைய
நான்படும் பெரும்பாடு கடல்ஆழத்தில் மறைந்தொழிய
நிலம்வாழ்வோர் தம்வாழ்வை இடரின்றித் தாம்தொடர
அழிவின் விளிம்பதனில் தவிப்புடனே நாள்கடத்தும்
எம்மினத்தோர் உய்வடையக் கலமொன்றுத் தருவீரே

மேலும்

வை ச பாலகிருஷ்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2019 10:40 pm

நாசுழற்றி வாய்திறந்து முதற்சொல் மொழிதினம்முதல்
தோள்கனக்கப் பொதிசுமந்து ஏடெடுத்துக் கலைபயின்று
நாள்தோறும் வீடுமுதல் பள்ளிவரை வழிநடந்து
மதிகுருஅவர் மொழிசொல்தனை தவறாது மனம்நிறுத்தி
தேர்வுக்குப்பின் தேர்வாகக் கரம்நோகத் தாளெழுதி
பெறுமதிப்பெண் ஒப்பிட்டு உயர்கல்வி முடித்திட்டு
ஆயிரம்பொன் கொடுத்தாலும் அரசுப்பணி ஆகாதென
ஐநூறு இடத்திற்கு ஐயாயிரம் விண்ணப்பம்
எறிவேலது கரம்திகழக் களம்மோதும் படையன்ன
நிலங்கொள்ளப் புரிபோரொத்துப் பணிகொள்ள மனங்கொண்டு
நாளெல்லாம் துயர்பட்டு உளம்மகிழ வென்றிட்டு
அடைபணிதனை விருப்புடனே உடனேற்றுக் கைக்கொண்டு
ஆலயம் இதுவென்றதன் தேவைகள் தானுணர்ந்து
ஏற்றப் பொறுப்புகள் திறம்பட முடித்திட்டு

மேலும்

வை ச பாலகிருஷ்ணன் - சுரேஷ்ராஜா ஜெ அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

அவள் அழகைவிட அழகு - தமிழ் அவளைவிட அழகு

கவிதைகள் ,நகைச்சுவை,கதைகள், கட்டுரைகள்
ஒருவர் எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம்

மேலும்

அழகு .. கவிதையாய் எழுதி போட்டிக்கு சமர்ப்பிக்கவும் 31-Aug-2019 11:31 am
அழகு .. கவிதையாய் எழுதி போட்டிக்கு சமர்ப்பிக்கவும் 31-Aug-2019 11:31 am
போட்டி முடிவுகளை அறிய ஆவல். 01-Jan-2019 7:04 am
தங்க சிலை ஒன்று காலில் கொலுசு கட்டி ஒடுவதைக் கண்டாயா அதோ அதோ அவள் பாதத்தில் இருந்து அந்த கொலுசின் ஓசைகள் சிதறிப் போவதைக் கேட்டாயா என் கர்பத்தில் வளர்ந்த வெண்ணிலவு பூமியில் தரையிறங்க அவளை அள்ளி எடுத்து வானத்தில் நிறுத்துகையில் "அம்மா" என்றாளே மழலையில் முதன் முதலாய் அவள் அழகா அவள் மழலை அழகா மழலையில் மலர்ந்த தமிழ் அழகா எதை அழகு என்பேன் 30-Dec-2018 3:32 am
வை ச பாலகிருஷ்ணன் - சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Nov-2018 4:37 pm

பிரம்மனே உதவிடுவாய்
***********************************************
சிறுஉதவி கேட்கவே சீ எனும் என்னுள்ளம் !
பெரும்பதவிப் பேயனெனைத் தூ எனாதே சீரார்
அறுபத்து மூவராம் அன்பர்தம் கூட்டில்
ஒருவனாய்ச் சேர்த்திணைத்து வைத்திடுவாய் !

மேலும்

மிக்க நன்றி ஐயா. இப்பாடல் வரிகள் அடியேனால் இயற்றப்பட்டவை. தங்களின் கருத்தால் மனம் மகிழ்கிறேன். 04-Dec-2018 6:47 pm
அருமையான வரிகள் ... 04-Dec-2018 10:50 am
அருமை அருமை தங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி . இது நால்வரில் எவர் அருளியது . கூறிட மகிழ்வேன் நன்றி 04-Dec-2018 7:31 am
நீறொடு நன்நாகம் அணிதிகழ் தேகன் பொங்கு வளகங்கை பிறைமதி சூடி ஆடல் தான்புரிய அகிலம் இயக்கிடும் பேயோன் எம்பிரான் பொன்னடி சேர்மினே 02-Dec-2018 10:21 am
வை ச பாலகிருஷ்ணன் - சக்கரைவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Nov-2018 4:16 pm

பிரம்மனோடு ஒரு வாதம்
*******************************************************
உன்சிரங்கள் நான்கில் ஒருசிரத்தைக் கிள்ளிய
எம்பெருமான் பக்தன் யானாவேன் ! என்சொல்கேள் !
என்னைப் படைத்தால் சிவனடியார் கூட்டத்தில்
இன்னுமொரு எண்கூடும் என்றெண்ணு !

மேலும்

சொற்பிழைக்கு வருந்துகிறேன் . சுட்டியதற்கு நன்றி 04-Dec-2018 7:27 am
கவிதை மிக நன்று. தங்கள் பக்திக்கு எனது வணக்கங்கள். ஆனால் ஒருசிறு திருத்தப் பரிந்துரை. சிரங்கள் ஐந்தில் ஒன்று கிள்ளப்பட்டே எண்ணிக்கை நான்கானது. வாழ்த்துக்கள். 02-Dec-2018 9:48 am
தங்கள் பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி 26-Nov-2018 4:48 pm
எல்லாம் இறைவனின் திருவிளையாடல் தான்... 26-Nov-2018 4:22 pm
மேலும்...
கருத்துகள்

மேலே