Ganesh - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Ganesh
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  10-Apr-2020
பார்த்தவர்கள்:  16
புள்ளி:  0

என் படைப்புகள்
Ganesh செய்திகள்
Ganesh - சுவாதிகுணசேகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Apr-2020 11:12 am

கல்லூரி காலங்கள்

பிரிந்து போக நேர்ந்தாலும்
பிரியா விடை அளித்தாலும்
படர்ந்து நிற்க்கும் மனதினிலே
பதிவாய் உன் நினைவலைகள்...

மேலும்

நீங்காத நினைவலைகள்.... 17-Apr-2020 4:12 pm
Ganesh - சுவாதிகுணசேகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Apr-2020 10:41 pm

அவள் என்னவளே

நினைவுகளின் அழகி இவள்- என்

நினைவற்ற அரக்கி இவள்

நித்தம் நீ நிறைந்தாயடி- என்

சித்தத்தில் புதைந்தாயடி

அர்த்தம் அற்ற மனதினிலே - நீ

அர்த்தராய் மணந்தாயடி

மேனியெல்லாம் சிலிர்க்குதடி - உன்

மென் நயனம் படர்கையிலே

ஆணி கொண்டு அடித்தாயோ - என்

அச்சார வயதினிலே...

சத்தம் இல்லா என் சாலையிலே

யுத்தம் நிகழ்த்தி செல்பவளே

அர்த்தம் நான் வினவயிலே - இது

ஆகாதென்று உரைத்தவளே...

ஆம்...

அர்த்தம் நான் வினவயிலே - இது

ஆகாதென்று உரைத்தவளே...

ஆயினும்
அவள் என்னவளே...

காதல் கொண்டேனே

கண்மணியாள் உன் மேலே

மோதல் கொண்டு முறைக்காமல்

மேலும்

நன்றி 18-Apr-2020 6:22 pm
மாறாத ௧ாதலுடன் மங்காமல் ௧ாத்திருப்பேன்.... ௧ாதல் கூறிடும் கவின் மிகு வரிகள்... 18-Apr-2020 6:00 pm
Ganesh - சுவாதிகுணசேகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Apr-2020 4:00 am

காலை கதிரவனும்

கண் சிமிட்டும் நிலவவளும்

காதல் கொண்டனவோ - அதன்

காரணமாய் அலைந்தனவோ....

காலை மாலையென

கதிரவனும் தான் அலைந்து

காதல் நிலவவளை

காணாமல் தான் நொந்து

தேடி தேடியே தினமும் வலம் வந்து

தேன்நிலவவளும் தேய்பிறையாய் தான் தேய்ந்து....

நிலவவளை காணாத கவலையிலே

மறைவானோ கதிரவனும் மாலையிலே

கதிரவனின் கதிர்களதன்
நினைவினிலே - குளிர்

காய்வாளோ நிலவவளும் இரவினிலே.....

மேலும்

சூரியசந்திரன்😍😍 03-May-2020 9:30 pm
நன்றி கவிஞரே... 24-Apr-2020 11:48 am
ஹா ஹா ரசித்தேன் கவிஞரே உங்கள் கவித்துவத்தை 24-Apr-2020 11:18 am
கண் சிமிட்டுதல் என்ன...கவியின் கற்பனையிலே கவி கூட பாடுவாள் நிலவவள்... 24-Apr-2020 8:13 am
Ganesh - சுவாதிகுணசேகரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Apr-2020 11:09 pm

கல்லூரி

காலம் அது கடப்பதனை
கண்ணீரால் விடையளிக்க
கடைசி இருக்கை காலங்களும்
கரைந்து போகும் கோலங்களாய்
கடந்து போக துடிக்கின்றன
கல்லூரியின் கருவறையில்....

மேலும்

👏👏👌 16-Apr-2020 10:00 pm
நன்றி 16-Apr-2020 11:35 am
உங்களின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள் 15-Apr-2020 11:38 pm
Ganesh - சுவாதிகுணசேகரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Apr-2020 3:01 pm

அர்ப்பணமானாய் சொப்பனத்திலே

சித்திரமானாய் நித்திரையிலே

கற்பனையிலோ கான் ஆனாய்-பிறர்

காண முடியா வான் ஆனாய்

ஆண்டுகள் ஆயிரம் கரைந்தாலும்

ஆயிரம் அரசுகள் மறைந்தாலும்

கூர் வாளின் வீரத்தை- உன்

ஓர் காலால் நீ முறிப்பாய்

சிலாவே என்றுனை சிலர்

சித்தரிக்கும் வேளையிலும் - என்

கனாவாய் உனில் நான் உறைந்தேன்

தின கனாக்களில் உனை
- கண்டுரைத்தேன்

ஆசை மடல் உனக்காக - இவ்

அருஞ்சொற்களும் உனக்காக

பேசும் நயனம் உனக்காக - இப்

பேதை மனமும் உனக்காக

அன்பே....அருள்மொழி வர்மா

ஆருயிரே என்றெனை
- அழைக்காவிடினும் உன்

வாளுறையிலாவது

மேலும்

நன்றி நண்பரே 20-Apr-2020 7:00 am
சிறப்பான பதிவு 20-Apr-2020 5:22 am
மிகவும் ௮௫மை.... 15-Apr-2020 12:33 pm
அருமையான பதிவு 13-Apr-2020 5:28 pm
மேலும்...
கருத்துகள்

மேலே