Jothi. J - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Jothi. J |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 07-Jun-2011 |
பார்த்தவர்கள் | : 47 |
புள்ளி | : 5 |
வந்தவரெல்லாம் வரமாட்டார்
வந்தவழியையும் மறந்திருப்பார்
வேட்பாளர்கள் !
நினைவிலிருக்கும் சிலகாலம்
நீரில்எழுதின எழுத்துக்களாகும்
வாக்குறுதிகள் !
அள்ளித்தெளித்த மாக்கோலம்
ஆடிக்காற்றில் அலங்கோலமாகும்
தேர்தல் அறிக்கை !
அழகாய்தெரியும் ஆடைகளும்
கிழிந்திடும்நிலை உருவாகும்
புதிய அரசாங்கம் !
வெளியேவந்த கரையான்கள்
புற்றுக்கேத் திரும்பிவிட்டன !
கரன்சிகள் !
எதிரேதெரிந்த மாற்றங்கள்
எட்டும்நிலையில் மறைந்தது !
தேர்தல் முடிவுகள் !
பழனி குமார்
காற்றோடுக் கலந்துவிட்டதென் முத்தங்கள்-வித்யா
உயிர்குடிக்கும் அட்டையொன்று
கொஞ்சம் கொஞ்சமாக
என்னிதயம் குடைந்து
உயிர் குடித்துக்கொண்டிருக்கிறது.............!
பரவசமான வலி அது..........
கனவுகளிலும், சொல்லாத வார்த்தைகளிலும்
தீண்டாத ஸ்பரிசங்களிலும்
பரிமாறிக்கொண்ட முத்தங்களெல்லாம்
காற்றோடே கலந்து போனதோ.........?
வெறும் கானலாய் மாறியதோ.?
நீயே காதலானாய்
கள்வனானாய்
ஏன் காவலானாக வரவில்லை.?
நான் விரும்பியே
தொலைத்த நித்திரைகள்
இரவின் அனாதை வீதியில்
அலைமோதுகிறது.........!
உன்னை காதலிக்க
ஆயிரம் முறைகள்
கற்றுவைத்திருக்கிறேன்............
காதலனே உன்னை நீங்கினால்
நானென்ன ஆவ
உலக மொழிகள் அனைத்திலும் தேடினேன்
உன் பார்வைக்கான அர்த்தத்தை
கிடைக்கவில்லை இன்று வரையிலும்
ஆனால் நான் நிறுத்தவில்லை
என் தேடலையும்
புன்னகை பூக்கும் பூக்களில் தேடினேன்
மெல்ல தவழும் தென்றலில் தேடினேன்
அழகாய் சிரிக்கும் வண்ணங்களில் தேடினேன்
ஆர்ப்பரிக்கும் அருவியில் தேடினேன்
பாசம் மிகுந்த பசுமையில் தேடினேன்
ஆகாயத்தின் அழகில் தேடினேன்
நிலவில் தோன்றும் பனியில் தேடினேன்
மூச்சுக்காற்றின் வெப்பத்தில் தேடினேன்
அன்பே நீ அருகில் இருந்தும் கனவில் தேடினேன்
விழித்திருந்தேன் அன்பே !
விண்ணில் நீ நிலவாய் இருப்பாய் என்று
தவமிருந்தேன் அன்பே !
தங்க தேரில் வலம் வருவாய் என்று
நினைத்திருந்தேன் அன்பே !
நிஜத்தில் என்னை பிரியாதிருப்பாய் என்று
நீ வரும் பாதை பார்த்திருந்தேன் அன்பே !
பகலவனை காணும் மலர் போல
உன் வருகைக்கப்புறம்,
நான் கிடக்கிறேன் வீதிஓரம் வீசிய பூ போல
மறந்தும் விழிமூடவில்லையடி !
நீ என்னை மறுத்தபோதும்
காத்திருப்பேன் அன்பே !
என்றாவது கிடைக்கப்போகும் உன் பார்வைக்காக
நீ பார்