Viswa - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Viswa
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-Mar-2018
பார்த்தவர்கள்:  132
புள்ளி:  7

என் படைப்புகள்
Viswa செய்திகள்
Viswa - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2018 4:12 pm

அவளும் காதலும்!!!!

உன் விழியும் ஒரு சிறைதான் பார்த்த நொடியில் கைது செய்கிறாய் என்னை!!

களவுதான் குற்றம் ஆனால் இருவரும் குற்றவாளி ஏனெனில் களவு பொருள் இதயம்!!!

இமைக்கா நொடிகள் இறவாகாலம் சாத்தியம் காதலில் !!!

காணல் நீரும் தாகம் தீர்க்கும் காதல் கோடையில்!!!

காவல் இமையிலே கருவிழிகள் இரண்டும் சிறை கொண்ட சோகம்!!!

அவள் ஓர் அதிசயம் ஆனால் என்விழிவழி அவளை கண்டால் அது புரியும்!!!

இவன்
இரா.விஸ்வநாதன்

மேலும்

Viswa - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2018 4:19 pm

ஒரு கானிக்கு தண்ணீர் விட என் கண்ணீர்கூட போதவில்லையடி கண்ணம்மா !!!

காவிகள் கூடி பல மக்கள் கூக்குரலிட்டு நல்லசெய்திகள் இங்கு எங்களுக்கு இல்லையடி கண்ணம்மா!!!

கருவறையில் உன் திருவடியில் மலரா மொட்டு அழிக்கப்பட்ட அன்று உணர்ந்தோம் உன்னை செதுக்கியதும் மனிதன்தானே ஆதலின் நீ வெறும் கற்சிலை என்றே அந்தோ கடவுள் இல்லா சன்னிதானம் பாரடி கண்ணம்மா!!!

தலைவனை நம்பி தன் வீட்டை மறந்த தொண்டன் நல்ல தலைமையை மறந்து சிலர் ஏற தன்மானம் விற்க்கும்
தலைவன் கதை கேளடி கண்ணம்மா!!!

யாதும் ஊரே யாவரும் கேளிர் மாற்றி
நீ வாழ்ந்தால் அல்லது வாழவிட்டால் அது ஊர் யாரேனும் மனிதம் கொண்டு உன் அன்பை மட்டும் எதிர்நோக்கின் அவரே

மேலும்

Viswa - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2018 3:16 pm

பெண்ணே!
நீ மௌனவிரதம் இருந்தால் முதலில் உன் கண்களை மூடிக் கொள் ஏனெனில் உதடுகளை விட உன் கண்களே அதிகம் பேசுகின்றன!!!

இவள்
R.இந்திரா

மேலும்

Viswa - Viswa அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-Mar-2018 11:37 pm

வறுமையின் விந்தில் பிறந்தவன் நான்
ஆதலால் துன்பம் புதிதல்ல !
தோல்வியின் விளிம்பில் வளர்ந்தவன் நான் ஆதலால் கண்ணீர் புதிதல்ல !
இழப்பின் எல்லையில் வாழ்ந்தவன் நான் ஆதலால் ஏமாற்றம் புதிதல்ல !
கனவுகளை விழிகளில் மட்டும் சுமப்பவன் நான் ஆதலால் ஏக்கம் புதிதல்ல !
வெற்றியின் வாயிலில் துரோகம் பல கண்டவன் நான் ஆதலால் மாற்றம் புதிதல்ல !
அறிவின் ஓட்டம் மறியும்வரை ஏற்றம் பல மறவாதே !
சுவை உணரும் நாவும் நஞ்சை வெளியிடும் கவணம்கொள் !
சோதனை ஈன்றா சாதனையில்லை உன்னில் விதையிடு எண்ணம் உரமிடு அறிவின் துனைகொடு வெற்றியை சுவைத்திடு !

இவன்
இரா.விஸ்வநாதன்

மேலும்

முடியும் என்று உன்னை நீ நம்பு இமயம் தான் இலக்கு என்றால் கூட அதுவும் உன் எண்ணத்தில் தூசு தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Apr-2018 12:02 pm
Viswa - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Mar-2018 11:37 pm

வறுமையின் விந்தில் பிறந்தவன் நான்
ஆதலால் துன்பம் புதிதல்ல !
தோல்வியின் விளிம்பில் வளர்ந்தவன் நான் ஆதலால் கண்ணீர் புதிதல்ல !
இழப்பின் எல்லையில் வாழ்ந்தவன் நான் ஆதலால் ஏமாற்றம் புதிதல்ல !
கனவுகளை விழிகளில் மட்டும் சுமப்பவன் நான் ஆதலால் ஏக்கம் புதிதல்ல !
வெற்றியின் வாயிலில் துரோகம் பல கண்டவன் நான் ஆதலால் மாற்றம் புதிதல்ல !
அறிவின் ஓட்டம் மறியும்வரை ஏற்றம் பல மறவாதே !
சுவை உணரும் நாவும் நஞ்சை வெளியிடும் கவணம்கொள் !
சோதனை ஈன்றா சாதனையில்லை உன்னில் விதையிடு எண்ணம் உரமிடு அறிவின் துனைகொடு வெற்றியை சுவைத்திடு !

இவன்
இரா.விஸ்வநாதன்

மேலும்

முடியும் என்று உன்னை நீ நம்பு இமயம் தான் இலக்கு என்றால் கூட அதுவும் உன் எண்ணத்தில் தூசு தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Apr-2018 12:02 pm
Viswa - Viswa அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2018 11:48 am

துவளாதே தோல்வி முடிவல்ல துவக்கம் !

நினைவவிற்கொள் வெற்றியை சுவைக்கும் நீ அவ்வெற்றிவிருச்சத்தின் விதை ஓர் தோல்வி என்பதை!

துணிவுகொள் வெற்றி ஓர் அழகிய கனவு தோல்வி அதற்கான ஆயத்த உறக்கம் !

உறுதிகொள் தோல்விகள் போல் ஓர் நல்ல ஆசான் இப்பூமியில் உனக்கான அனுபவத்தையும் பகுத்தறிவையும் பயிற்றுவிக்க இயலாது !

பணிவுகொள் தோல்விகள் தந்த வடு உனது அடுத்த முயற்சிக்கான சீரிய விருது!

பொருமைகொள் வீழும் நீர்வீழ்ச்சி வெகுண்டெழும் பெரும் காட்டாராக அதுபோல் உன் வீழ்ச்சி வெற்றி என்னும் பெருங்கடலை உருவாக்கும்!

இரா.விஸ்வநாதன்

மேலும்

வென்றவன் எல்லாம் ஏதோ ஒரு வகையில் தோற்றவன் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Mar-2018 11:21 pm
Viswa - Viswa அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2018 11:42 am

முதுகெலும்பிலிருந்து உதித்தவல் நீ ஆதலால் நீ இன்றி இவ்வுலகின் மனிதர்கள் எவரும் இயங்குவதில்லை !

படைப்பவன் இறைவன் எனில் உலகின் மாதர் யாவரும் இறைவனே!

மரணத்தின் வலியை உணர்ந்து கருவிற்க்கு உயிர் கொடுக்கும் அனங்கிவள் பிறப்பு அகிலத்தில் சிறப்பு !

குருதியும் உணவான அதிசயம் மடந்தையின் வாழ்வின் அற்புதம்!

எங்கோ பிறந்து எங்கோ சேரும் நதியும் வஞ்சியின் வாழ்வும் ஒன்று!

உயிர்களின் ஆதியில் தொடங்கி அந்தம் வரை தொடரும் மாது நீ இன்றி அமையாது உலகு!

உலக பெண்மைக்கு சமர்பணம்!
இரா.விஸ்வநாதன்

மேலும்

பாலியல் குற்றங்கள் ஆண்கள் செய்தால் கூட கருவறையில் குற்றத்தை அடையாளமாய் சுமப்பது பெண்மை தான். பெண்கள் ஒரு தவம் பெண்மை ஒரு வரம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Mar-2018 11:19 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
மேலே