சரண் மா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : சரண் மா |
இடம் | : |
பிறந்த தேதி | : 10-Apr-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Apr-2016 |
பார்த்தவர்கள் | : 62 |
புள்ளி | : 1 |
ராகங்கள் பதினாறு
அவர் இசையில் அது நூறு..
ஏழு ஸ்வரங்கள் இசையில்
மூன்று போதும் அவருக்கு..
இசையால்
மழை பெய்யுமோ?
இவர் நினைத்தால்
கண்ணீர் பெய்யும்..
தூக்கம் இல்லாத இரவில்
தாலாட்டும் அன்னை
இவர் இசை..
மண்டை வெடித்த
மன அழுத்தத்தில்
மருந்தாய் வரும்
இவர் இசை..
காதலியின் பிரிவில்
கலங்கி நிற்கையிலே
கண் முன் நிற்பாள்
இவர் இசையால்..
அவர் விரல்பட்ட ஸ்வரங்களில்
எத்தனை இனிமை !
தேன் கொண்டு எழுதினாரோ
ஸ்வரங்களை?
எவரிடம் பெற்றாரோ
இசை வரங்களை ?
தோல்வியில் ஆறுதலாய்
வெற்றியில் ஆனந்தமாய்
சோகத்தில் சுகமாய்
ஏக்கத்தில் துணையாய்
அவர் இசை போதும்
எனக்கு..
வேறென்ன
உயிரானவளே...
நான் விழிமூடி திறக்கும்
அந்த நேரம் வரும் உன் உருவம்...
நான் உறங்கிய போது
என்னுடன் உறவாடுதடி...
என் விழிகளில் வடிந்த
கண்ணீர் சொல்லுமடி...
உன்மீதான என்
காதலின் ஆழத்தை...
என்னை மறந்துவிடு
என்றாயடி நீ...
என்னை மன்னித்துவிடு
என்றேனடி நான்...
ஏனடி மன்னிக்க
மறந்தாய் என்னை...
நீ எனக்கு இறுதியாக கொடுத்த
இதழ் முத்தம் சொன்னதடி...
உனக்கு இன்னும் என்மீதான
காதல் குறையவில்லை என்று...
நீ என்னை அணைத்த உன் வாசம்
என் உடைகளில் இன்னும் வீசுதடி...
உன்னை மறக்காத
என் இதயம்...
விழிகளில் தேங்கி நிற்கும்
உன் நினைவுகள்...
என் உயிரானவளே..
என் விரல் இடுக்கில்
மழைத்துளி படாமல்
உன் விரல் மேல் பட
கை கோர்த்து நாம் நடக்க
நீ வருவாயா..?
முகத்தில் முத்தங்களாய்
மழை பொழிவதில்
பொறாமை கொண்டு
துப்பட்டாவில் முகம் மூட
நீ வருவாயா..?
கடும் மேகமூட்டத்தில்
முகம் மறைத்த
நிலவுக்கு மாற்றாய்
உன் முகம் நான் காண
நீ வருவாயா..?
சடசட மழைச்சத்தத்திலும்
நடுங்கும் உன் பற்களின்
சத்தம் என் பாடலுக்கு
பிண்ணனி இசையாக
நீ வருவாயா..?
மழையிலும் மறையாத
சில நட்சத்திரங்களை
வெட்கத்தில் ஓடவைக்க
காதல் செய்ய
நீ வருவாயா..?
குண்டு குழியில்
தேங்கிய நீரில்
புகைப்படமாய் நாம்
நிற்க, அதை ரசிக்க
நீ வருவாயா....?
மழை நின்ற போதும்
ரசனை தீர
என் விரல் இடுக்கில்
மழைத்துளி படாமல்
உன் விரல் மேல் பட
கை கோர்த்து நாம் நடக்க
நீ வருவாயா..?
முகத்தில் முத்தங்களாய்
மழை பொழிவதில்
பொறாமை கொண்டு
துப்பட்டாவில் முகம் மூட
நீ வருவாயா..?
கடும் மேகமூட்டத்தில்
முகம் மறைத்த
நிலவுக்கு மாற்றாய்
உன் முகம் நான் காண
நீ வருவாயா..?
சடசட மழைச்சத்தத்திலும்
நடுங்கும் உன் பற்களின்
சத்தம் என் பாடலுக்கு
பிண்ணனி இசையாக
நீ வருவாயா..?
மழையிலும் மறையாத
சில நட்சத்திரங்களை
வெட்கத்தில் ஓடவைக்க
காதல் செய்ய
நீ வருவாயா..?
குண்டு குழியில்
தேங்கிய நீரில்
புகைப்படமாய் நாம்
நிற்க, அதை ரசிக்க
நீ வருவாயா....?
மழை நின்ற போதும்
ரசனை தீர
பிரியமானவளே...
உன்னை எதார்த்தமாக
நான் பார்த்தேன்...
நீயோ என்னை
தலைசாய்த்து பார்த்தாய்...
உன் காதலை
என்னிடம் கண்களால் பேசி...
என் இதயத்தில் காதல்
கோட்டை கட்டியவளும் நீதான்...
ஒரு வார்த்தையில் எனக்கு
கல்லறை கட்டியவளும் நீதான்...
சாலையோரம் மலர்ந்த
மலர்களை பறித்து...
நீ வரும் பாதையில்
போட்டு வைத்தேன் அன்று...
நீயோ என் இதயத்திற்கு
மலர்வளையமே வைத்துவிட்டாய் இன்று...
பூவான உன் நெஞ்சம்
கல்நெஞ்சாக மாறியது எப்படி...
என்னை முழுவதும்
நீ மறக்க.....
மக்கள் நிறைந்த பேருந்து..
மூச்சு படும் தூரத்தில் அவள் முகம்..
கோர்த்து கொண்ட கைவிரல்கள்..
அவள் தலை சாய்த்த என் தோள்கள்..
பார்க்காதது போல் பார்க்கும் மக்கள்..
திடீர் நிறுத்தத்தால் அவளின் அச்சம்..
மெய் மறந்து நின்ற நான்
நிஜ உலகத்துக்கு மீண்டு வந்தேன்..
அவள் அங்கு இல்லை..
அத்தனையும் கனவு..
காரணம் அவள் நினைவு...
பேருந்து நெரிசலிலும்
பேரின்பம் இந்த காதல்...
இவர் பின்தொடர்பவர்கள் (2)

madasamy11
Bangalore

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவரை பின்தொடர்பவர்கள் (2)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
