கவிதாசன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கவிதாசன் |
இடம் | : வீரம்பாக்கம் |
பிறந்த தேதி | : 30-May-1967 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 1148 |
புள்ளி | : 0 |
கண்ணனைத் தேடுகிறாள்.... மீரா
கண்ணனைத் தேடுகிறாள்... தன்
கண்களில் விளையாடி ...
கார்குழல் தினம்கோதி
மார்பினில் உறவாடி
மனத்தினுள் கலந்திருக்கும்
சேதியை அறியாமல்
கண்ணனைத் தேடுகிறாள்... மீரா
கண்ணனைத் தேடுகிறாள்..
புல்லாங்குழல் போலப்
புதுப்புது இசை கூட்ட
கண்ணன் வருகின்றான்
கண்மணி கனிகின்றாள்
கள்ளத் தனமனைத்தும்
கண்களில் எடுத்துரைத்து
உள்ளத்தை வருடுகின்றான்
உடையாய் மாறுகின்றான்
கண்களைத் திறக்கையிலே
கற்பனை என்றறிந்து
கண்ணனைத் தேடுகிறாள்... மீரா
கண்ணனைத் தேடுகிறாள்... தன்
கண்களில் விளையாடி
கார்குழல் தினம் கோதி
மார்பினில் உறவாடி
மனத்தினுள் கலந்திருக்கும்
சேதியை அறியாமல்
கண்ணன
செவ்வானக் கூட்டத்தில் மென்மையாக மேகங்களாய்...,
சற்றே சாந்தமான பெண்மனது...!
வாழ்வோடு போராடும் போர்க்களம் தான் எத்தனையோ உனக்கு...!
இரு விழிகளோடு கருணையின் கண்ணீர் மட்டுமல்ல உனக்கு..., கண்ணீரின் சுவடுகளை எழுதிப்போன எழுதுகோலின் பரிவர்த்தனைகளும் உனதே..!
புன்னகைச் சாவிகளை ஏதோ இரயில் பயணத்தின்
கணங்களில் தவறவிட்டாயோ..,
அன்றி கனவுகளின் சிற்ப்பிக்குள் ஒளிந்து போனதோ?
தொலைத்த உனக்கான நிமிடங்கள்,
இன்று பிறரின் கேளிக்கைப் பேச்சுக்களாய்..,
போதும் உன் பாலைவன கள்ளிச்செடியின் கதாப்பாத்திரம்..!
சிறைகளின் வாயில்களை தகர்த்தி புதிதாய் அவதரித்தாலன்றி உன் சுதந்திரம் தொடுவானமாய்..!
மென்மையின் சிகரங்களில் உ
இதயத்தை ஆளுகிறாய்
உயிரினில் வாழுகிறாய்
இசையுடன் கவிதைகளாய்ப்
பூத்துச் சிரிக்கிறாய்.... நீ என்
இயற்கையை வடிவமைத்து
இணைந்து கொள்கிறாய்..
உயிர்கள் ஒன்றிணைந்து
உவக்கும் காதலிலே
பொய்யாய் நடப்பதற்கு
வழியில்லையே...
உண்மை இதுதெரிந்தும்
உள்ளம் சினமடைந்தால்
உரிமை கொள்வதற்கு
மொழியில்லையே
குழந்தை போல்தவிக்கும் நிலைபாரம்மா...
குலுங்கும் சிற்றுயிரின் ஒலிகேளம்மா...
கோபம் வேண்டாமே என் செல்லம்மா...
இதயத்தை ஆளுகிறாய்
உயிரினில் வாழுகிறாய்
இசையுடன் கவிதைகளாய்ப்
பூத்துச் சிரிக்கிறாய்... என்
இயற்கையை வடிவமைத்து
இணைந்து கொள்கிறாய்..
உனக்குள் கரைந்தமனம்
உனக்குள் கரைந்த உயிர்
உனக்கே உன்னிடம
காதலி என் கண்மணி
இன்று காதல் பிறந்தநாள் ...
உன் உயிரிலே எனைக் கலந்ததால்
இன்று எனக்கும் பிறந்தநாள் ...
உனக்குநான் சிறுமழலைதான்
இதை என்றும் மறவாதே..
உன் மடியில்நான் இல்லையேல்
கண்களும் உறங்காதே...
காதலி என் கண்மணி
இன்று காதல் பிறந்தநாள்
உன் உயிரிலே எனைக்கலந்ததால்
இன்று எனக்கும் பிறந்தநாள்..
காலையில் விழித்ததும் உன்முகம் தேடுவேன்
காற்றிலே உனைக்கண்டு இதழ்முத்தம் கோருவேன்
கதிரொளிஹதொடுகையில் கரங்களில் ஆடுவேன்
சேலையின் நிழலில்தான்
சொர்க்கமே காணுவேன்
காதலி என் கண்மணி
இன்று காதல் பிறந்தநாள்
உன் உயிரிலே எனைக் கலந்ததால்
இன்று எனக்கும் பிறந்தநாள்..
பூமியில் பிறந்ததுன் நெஞ்சினில் வாழவே