rameshs - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  rameshs
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Feb-2014
பார்த்தவர்கள்:  124
புள்ளி:  23

என் படைப்புகள்
rameshs செய்திகள்
rameshs - துரை பாப்பாத்தி-காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2014 3:37 pm

கடற்கரை ஓரம்
அம்மாவின் கிறுக்கல்கள்
என் கை பிடித்து
அவள் கற்று தந்த மொழிகள்
கடல் அலைகளால் கரைந்து போனாலும்
என் இதயத்தில் காய்ந்து கிடக்கிறது
அவைகளை அழிக்க தெரியாமல்

மின்னல் வெட்டும் வானத்தில்
என்னை மிரட்டும் அந்த இடி சத்தத்தை
உன் காதில் வாங்கி
என் காதை மூடிய உன் கைகள்

நான் கதறியபோது
என்பாரத்தை தாங்கவில்லை என்றாலும்
உன் மார்பை மெத்தையாக்கி
அதில் தூங்க வைத்த உன் உள்ளம்

உன் கண்ணீரை
எனக்கு பாலாக்கி
என் தூக்கத்திலும்
நீ விழித்திருந்தாய்
என் விடியலுக்காக

சோகங்கள் பலயிருந்தும்
அதை உன் சேலையிலே முடிச்சிபோட்டு
என் மூச்சிக்கு காற்றாய் நீ இருந்தாய்

மேலும்

அருமை .. 03-May-2014 3:49 pm
ஒரு தாய் தாயை சுமக்க ஆசைபடுகிறதா... அருமை . 03-May-2014 3:46 pm
rameshs - கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Apr-2014 10:37 pm

தாவணியில்
வந்தால்
நீ
மரபுக்கவிதை !

சேலையில்
வந்தால்
நீ
புதுக்கவிதை !

சுடிதாரில்
வந்தால்
நீ
நவீனம் !

ஜீன்ஸில்
வந்தால்
நீ
ஹைக்கூ !

ஆக,
நீ
எதில் வருகிறாய்
என்பது
முக்கியமல்ல !
நீ
வருகிறாய்
என்பதே
முக்கியம் !

எப்படி வந்தாலும்
நீ
கவிதைதான் !

மேலும்

ஆம் தோழி ! ஒரு கவிதையே கவிதையை இரசித்ததற்கு நன்றி தோழி 16-Apr-2014 9:58 pm
அழகிய கவிதை பெண்ணவள் வந்தால் மொத்தக்கவிதைதான்........ 16-Apr-2014 4:18 pm
கலக்குவது நானல்ல நண்பா ! அவள்தான் ! 12-Apr-2014 10:46 pm
கலகுரிங்க போங்க 10-Apr-2014 3:52 pm
rameshs - rameshs அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2014 7:21 am

நானறிந்த கடவுளில்
நாடறிந்த தெய்வம் நீதானே
நடை பயின்று உடை கட்டி
நாளும் பொழுதும் நான் வளர
நித்தம் நித்திரை
கடன் தந்த நில மகள் நீயே!

நடந்தேன் நடை வண்டியாய்
நான் சொல் பழக
நீ என் குருவாய்
கைவிட்ட கணவனை
கனவில் ஓரம் வைத்து
தினமெல்லாம் எனக்கு தந்தையாய்

காதலித்தேன் கன்னி அவளை
மோதலுக்கு முன்னே
கானல் நீரான என் காதலுக்கு
கரை கண்ட நண்பனாய்

வேலையிடத்தில் விதமான சண்டைகள்
கலைமகளே கன பொழுதில்
துயரெல்லாம் போனதே
பொறுமை அவசியம்
புத்தி சொன்ன ஆசானே
என் தாயே

உன்னுள் எத்தனை முகங்கள்?
குழந்தையாம் நான்
குழந்தைகளிரண்டு எனக்கு
என்னையும் சேர்த்து
குழந்தைகள் நான்கு
என்ன ஓர் கணக்கு

மேலும்

அன்புக்கு அடையாளம் அன்னை நன்றி தோழமையே 02-Apr-2014 9:36 pm
அம்மா , அம்மா - 26-Mar-2014 2:27 pm
rameshs - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2014 8:05 pm

தேர்தல் நெருங்கும் நேரத்தில்
அவர்களை மறந்துவிட்டனர்

தேர்தல் முடிந்தபின்
மக்களையே மறந்துவிட்டனர்

மேலும்

rameshs - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2014 8:02 pm

கடல் நீரை குறைக்க முடியாது
மழை நீரை பெருக்க முடியாது

மேலும்

rameshs - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2014 7:59 pm

மண்ணுக்கும் பசுமைக்கும்
உள்ள பந்தம் மழைநீரால்

காதலுக்கும் மனிதனுக்கும்
உள்ள பந்தம் கண்ணீரால்

மேலும்

rameshs - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2014 7:54 pm

தாகம் இருந்தாலும்
தண்ணீரை குடிக்க முடியவில்லை
விவசாய பூமி

மேலும்

rameshs - susila அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Mar-2014 9:25 am

நான் எழுதும் கவிதை
நிச்சயம்
உனக்கு புரியாது..

என் மனக்கண்ணாடியை
நீ அணிந்து பார்த்தாலும்
உனக்கு தெரியாது..
என்
மனக்காட்சிகள்
எனக்கே சரியாக
தெரியாத நிலையில்
அதை படம் பிடித்து
கவிதையாய் படைக்கையில்
உனக்கு மட்டும் தெரியுமா?
எனது கவிதை புரியுமா?

உனக்கு
என் கவிதை புரியாததால்
நான்
வருத்தப்பட முடியாது...

என் வருத்தங்களை
கவிதையாய் படைக்கையில்
அதுவும் பிறர்க்கு புரியவில்லையென
அதற்கும் வருத்தப்பட மாட்டேன்..

என் சிந்தையில்
சிந்தியவைகளை
எழுத்துக்களாய் கோர்த்து
நினைவுகளை வார்த்து
உணர்ச்சிகளை சேர்த்து
கவிதை தூரலாய் தூவுகிறேன்..

அந்த தூறலில்
நனைவது
உன

மேலும்

Arputham 06-Jun-2014 7:26 pm
கவிச்சாரல் புரிந்தவர்களுக்கு கோடைகால சாரல்மழை .. அதை அனுபவிக்க பலருக்கும் தெரிவதில்லை ... அழகான வரிகள் அருமை வாழ்த்துக்கள் ! 26-Apr-2014 12:43 pm
பரிசு பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ... தோழமையே 15-Apr-2014 7:20 pm
உடையும் நிலையில் இருக்கும் அணையின் மீது பெய்யும் கார்கால மேகமாக சில நேரம் எனது கவிதை... அருமை 10-Apr-2014 3:13 pm
மேலும்...
கருத்துகள்

மேலே