அதிர்கிறது சர்வதேசம் காணாமல்போன விமானத்தைத் தேடி...! அறியாத மனிதரில்லை பேசாத வாயில்லை வேண்டாத தெய்வமில்லை.! இறுதிப் போரை நிறுத்த கொட்டும் பனியிலும் ஆர்ப்பாட்டங்களிலீடுபட்ட புலம்பெயர் தமிழரால் அதிராமல், அசையாமல் தானிருந்தது சர்வதேசம் .......! அமெரிக்கக் கப்பலுக்காய் நப்பாசையுடன் காத்திருந்தே நம்பிக்கையிழந்து உயிரைவிட்ட ஈழத்தமிழனின் கூடுகளும் ஆதாரத்திற்கு இன்றங்கில்லை.! ஆனாலும் எஞ்சியுள்ள தமிழன் உளமுருகி வேண்டுகின்றான் காணாமல்போன பயணிகள் உயிர்தப்ப வேண்டுமென ...........! உலக மக்களுக்காய் கண்ணீர் விடுபவனுக்கு கண்ணீர் விட யாருமில்லை.... கொள்ளி வைக்கத்தான் உலகமெங்கும் ஆட்களதிகம்...!! ====================== தோழி துர்க்கா


வழி : தோழி துர்க்கா கருத்துகள் : 0 பார்வைகள் : 126
6
Close (X)




புதிதாக இணைந்தவர்

மேலே