தன்மானம் உனக்கில்லை ஆனால் நெஞ்சு நிமிர்த்தி விறைப்பாக நடக்கிறாய் பெயரால் தமிழன் என்று......! உன்னினப் பெண்ணை மாற்றினத்தான் வேட்டையாட வேடிக்கை பார்த்தே காரியத்துடன் கைகொடுத்தாய்.! சந்தர்ப்பம் கிடைக்காமல் சகதிக்குள் விழுந்தாய் அறியாமை கொண்டு நீயும் நெருப்பெடுத்தாய்..! கொள்கை எதுவுமின்றி சிந்தையில் அழுக்குடனே சாக்கடைப் பன்றிபோல் அடிக்கடி நிலைமாறினாய்.! தட்சணா மூர்த்தி போல் தெற்கில் இருந்துகொண்டு நேரடிப் பாதிப்பு பற்றி தொடர்பின்றி கதையளக்கிறாய்.! தாயென்று சொல்லியே சால்வையில் தொங்கும் நீ வாழும் வாழ்க்கையில் அர்த்தம் ஏதுமுண்டோ..!!! ====================== தோழி துர்க்கா
வழி : தோழி துர்க்கா கருத்துகள் : 0 பார்வைகள் : 120
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [143]
- கவின் சாரலன் [34]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மனக்கவிஞன் [28]
- மலர்91 [16]