மோகன் சிவா- கருத்துகள்

அதுவும் உண்மைதான் தோழி..
ஆனால் இங்கே போதும் என்ற வரையறையை​ வகுப்பது தான் கடினம்.. அன்பு அக்கறை காதல் இது போன்ற மனித உணர்வுகளுக்கு வரையறை செய்ய முடியும் என்றால் பெரும்பாலான மனிதர்கள் தாங்கள் தேடிக் கொண்டு இருக்கும் நிம்மதியை பெற்று விடுவார்கள்..

தனிநபர் தேவையைப் பொறுத்து நிம்மதியானது ஆட்களுக்கு தகுந்தாற்போல் மாற்றங்கள் அடைகிறது..

ஒருவரின் கருதிக் காலம் வரை அவருக்கு தேவைகள் இருந்து கொண்டே இருக்கும்..

சாதி..
வேறொன்றும் இங்கு தடையாக இருக்க வாய்ப்பில்லை..
அடுத்து பொருளாதாரம்..
அடுத்து தங்களின் தேர்வு சரிதான என்றும் குழப்பம்..

நண்பரே இயற்கை ஒன்றே கடவுள்..
நம் முன்னோர்களும் இந்த இயற்கை ஒன்றை தான் கடவுளாக பாவித்தனர்...


இடையே சாதியம் நுழைவு ஓர் அரசியல் சித்தாந்தம்... அதற்கு ம் நாயக்கர் தமிழ் மண்ணில் மீது படையெடுப்புக்கும் தொடர்புகள் அதிகம்.. அதில் சிக்கிய நாம் இன்னும் மீள் உருவாக்கம் அடையமுடியவில்லை..

தவறான பரிந்துரையே
காரணம் இவ்வாறு நடந்தால் இந்த தேசத்தின் விவசாயம் கார்ப்பரேட் வசம் போய்விடும் மரபு மாற்று என்ற விஷத்தை நமக்கே வியாபாரம் நடக்கும்..

ஆம்..
நான் ஞானி அல்ல...

சாதாரண மனிதன்..
மனிதனுக்கே உரித்தான தீய உணர்வுகளை என்னுள்ளே முடக்க சதா முயன்று கொன்றிருக்கும் சாதாரண மனிதன் தான்...

என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் நல்லொழுக்க பாதையில் எண்ணெய் துளியாய் இருந்து வழிநடத்த முயலும் சுயநலபேய்தான் நான்..

இதை ஒட்டுமொத்த சமூகத்துக்கு சொல்லப்போய் கல்லடி சொல்லடிபட்டு..
பிசாசாக விரும்பவில்லை..

நாம் வாழும் காலம் அப்படிபட்டது மித்திரரே..

தங்களுடனான உரையாடல் மூலம் எனக்கு ஒரு விடயம் தெளிவாகிறது..

இன்னும் "பரவலாகிய அன்பு" எனும் மந்திரம் மடியவில்லை என்று..

வாழ்த்துக்கள்..

ஆம் நிதர்சனமான உண்மை..

அதனால் தான் ஒட்டகின்ற விஸம் போதும் என்று.. எண்ணெய் துளிகளாய் மாறிவிட்டேன்..

மாறாக விஸக்குடத்திற்குள் விஸமெனும் அன்பெனும் வேதிபொருளாய் மாறி வேதிவிணை செயல்பாடுகளில் இறங்கி கல்லடிபடுவதைகல்லடிபடுவதை நான் விரும்பவில்லை...

நீங்கள் என்னை சுயநல பேயென்றும் பிசாசு என்றும் கூறினாலும் பரவாயில்லை..

எண்ணெய் துளிகளிளும் விஷம் கலக்காத பகுதிகள் உள்ளதை மறக்க வேண்டாம்..

எண்ணெய் துளியில் ஒட்டும் விஸத்துக்கு வேதி பொருட்கள் தந்தால் போதும் என்று நான் நினைக்கிறேன்..

உங்கள் வேதியியல் ஆராய்ச்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

இரட்டைப் படை சொற்களாய் என் தமிழ் எவ்வளவு அழகு ..

தெளிவாக படியுங்கள்..

விஸக்குடம் என சமூகத்தை குறிப்பிட்டேன்..

தனது தவறை ஒப்பிட்டு பார்க்க இன்னொரு தவறு தேடப்படும் காலமிது என்பதை மறுக்கவில்லை..

ஆனால் பாலில் விஸம் கலந்தாலும் ..
விஸக்குடத்தில் ஒரு துளி பால் இருந்தாலும் அணைத்தும் விஸமே..

இன்றைய சமுதாயம் விஸக்குடம் போன்றது தான்...
அதில் முடிந்த வரை எண்ணெய் துளிகளாய் இருக்க முயல்வதுதான் அறிவுடைமை..

இதையும் மீறி 100 % நல்லவராக வாழ வேண்டும் என்றால் கயமை பொறாமை
காழ்ப்புணர்ச்சி... இது போன்ற மனிதனுக்கே உரித்தான குணங்கள் இல்லாத வனத்தின் விலங்குகளுடன்
வாழழாம்.

முதலில் தவறை தெரிந்தே செய்பவர் சதவிகதம் மிக குறைவு..
எல்லா மனிதனுக்குள்ளேயும் நல்லவனும் கெட்டவனும் சேர்ந்தே வாழ்கிறார்கள்..
100சதவிகதம் நல்லவர் இங்கே யாரும் கிடையாது..
இங்கு நல்லது செய்ய தைரியம் யாருக்கும் இல்லையா..?என்பது..
நம் சமூகத்தின் சாபக்கேடான விடயமாக பார்கிறேன்..
ஏனெனில் இங்கு நல்லது கெட்டதை கூட பிரித்து பார்க்கும் தன்மை மழுங்கிவிட்டது..
அடுத்த காரணி சுயநலம்..
நல்லது செய்யப்போனால் நம்மிடம் உள்ள பொருளாதாராம் குறைந்நுவிடுமோ என்ற அச்சம்..சரி கெட்டதை தடுக்க போனால்...
அதனால் தனக்கு ஏதாவது ஆபத்து வருமோ சட்டசிக்கல் வருமோ என்ற பயம்..
இவை அணைத்தையும் விட மூன்றாவது முக்கிய காரணம் நேரமின்மை...
நாம் அனைவரும் ஏதோ ஒரு காரணத்துக்காக நேரம் பார்க்காமல் காசின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்...
இவ்வாறு செல்லும் போது மற்றவர்களின் நல்லதும் கெட்டதும் நம் மூளைக்கும் மனதுக்கும் எட்டாது.

மக்களின் எண்ணங்களுக்கு எதிராக செயல்படும் அணைத்துவிதமான ஒடுக்குமுறைகளும் தீவிரவாதமே..

இத்தகைய செயல்களை அரசாங்கம் செய்தால் அது ஒடுக்குமுறை..

அத்தகைய ஒடுக்குமுறைகளை எதிர்கும் மக்களை ..
மக்கள் போராளி என்பர்..
அதே அரசாங்கம் தீவிரவாதி என்பர்..

ஆனால் அத்தகைய போராட்டத்துக்கு மக்களால் ஆதரவு இல்லை என்றால் மக்களால் ஏ போராட்டக்காரர்கள் தீவிரவாதிகள் என்றே தூற்றப்படுவார்கள்


ஹைக்கூ..
அற்புதம்..


வானம் தன் மேனி கருகிவிட்டதென்றோ..
மின்னல் தன்னை பார்த்து கண் சிமிட்டுகின்றதோ..
இடி தன்னை வசைபாடுகின்றதோ..
அடச்சே...
இங்கே மேலிருந்து என்ன பயன்...?
நம் அருமை யாருக்குத் தெரியும்...?

நம்மை வரச்சொல்லி அனுதினமும்.
நம்மை மன்றாடும் உழரிடமே போய் சேரலாம்....


-இப்படிக்கு மழைத்துளிகள்...

யதார்த்த வரிகள்...

மாற்றம் காண.. இங்கே இந்தியாவில்
ஹிட்லர் மீண்டும் ஒரு முறை பிறக்க வேண்டும்.

இந்திய தேசம் தொடர்ந்து தமிழரை புறக்கணித்து வரும் நிலையில் தமிழரும் இந்தியாவை புறக்கணிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.

அவ்வாறில்லையென்றால் சொந்த நாட்டிலே வாழ்வாதாரத்தை இழந்து அகதிகளாக வாழும் சூழ்நிலைக்கு தள்ளபடுவார்கள் தமிழர்கள்.

பிரிவினை வாதத்திர்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும்
இந்திய அரசாங்கத்திடமே உள்ளது.

இதனை அரசு செய்ய தவறினால்..
நாளடைவில் இப்போது மக்களின் மத்தியில் முளைத்த இந்த பிரிவினைவாதம் பெரும் ஆலமரமாக வளரும்.

இதனை தடுக்காவிட்டால் பிரிவினைவாதம் "பிரிவினை " யில் தான் முடியும்.

பிரம்ம புத்திரா ..
சிந்து..
நைல் நதி..

இவைகள். எப்படி நாடுகளை கடந்து பயனிக்கிறதோ அவ்வழிமுறையில் தமிழக நதிகள்
இங்கே நிச்சயம் வரும்.

இலவசங்களுக்காகவோ பணத்திற்காக வோ ஓட்டு போடும் மக்களின் சதவிகிதம் குறைந்து விட்டது.

சின்னத்தை மட்டும் பார்த்து ஓட்டு போடும் மக்கள் தான் இங்கே அதிகம்.
அவர்களுக்கு இன்றைய எதார்த்த அரசியலை புரிய வைக்க வேண்டும்.

நாம் ஆண்டாண்டு காலமாக இலவசம் என்ற
பெயரால் காசின் பெயரால் சாதி/மதத்தின் பெயரால் நாம் எந்த அளவுக்கு முட்டாள்கள் ஆக்கபட்டிருக்கிறோம் என்பதை புரிய வைக்க வேண்டும்.
அரசியல் சாக்கடையை புறக்கணிக்க வில்லை .அதனை சுத்தம் செய்ய வழிகளை தேடிக்கொண்டிருக்கிறேன்

நீங்கள் குறிப்பிடும் படி சமூகத்தில் அது போன்ற புல்லுருவிகளும் உண்டு..

அதனால் தான் இங்கே நல்லவரை கூட சந்தேக பார்வையில் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

வேறு வழி தங்களிடம் உள்ளதா..
நன்பரே...?

அமைதி மார்க்கம்..
அதை நான் ஏற்கிறேன்..

நிலையான இந்தியா
தமிழரின் வாழ்வாதாரமும்..
உரிமையும் கலாச்சாரமும் காக்கப்பட்டால்
நிலைக்கும்.

மறப்பதும் நிலைப்பதும் இந்தியாவின் பொருப்பு

மூளைச்சலவை செய்ய பட்ட
மக்கள் இன்றளவும் சின்னத்தை பார்த்து ஓட்டு போடுபவர்கள் தான்.

விடியலை நோக்கியதோர் பயணம்..?

கார் இருளில் பயணிக்க நாமென்ன
வவ்வால்களா..?

வேறு பட்ட பார்வை...
சரியான பார்வையும் கூட..

தன்னலமற்ற ஒருவர் ஆட்சியாளராக அமைய பெற்றால்..
1. அவரை காசு பதம் பார்க்கும்/
2.கத்தி பதம் பார்க்கும்...

இதற்கு என்ன தான் தீர்வு..?


மோகன் சிவா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே