THANGAVELU C- கருத்துகள்

ஆண்டு மதிப்பு கணிப்பே உயிர்ப்பு.


கண்டு பல உரு நின்று
உண்டு உயிர் நிலை வாழ
பண்டு தொட்டு இன்று வரை
ஆண்டு மதிப்பு கணிப்பே உயிர்ப்பு.

அங்க நிறை நாடி வளரும்
பங்கு பாகம் ஒன்றி வரும்
இங்கே வாழ உயிர் இணைப்பு
தங்கி தசை புரதமும் கூடும்.

இறை வழிபாடு நம் குறியீடு
பறை சாற்றிய அழைப்பு தொடர்
உறை உறவு முறை பதிவு
மறை அறியும் உணர்வு புலனே.

உலக இடம் உலவ படம்
வலம் வரும் உயிர் மூச்சு
நலம் வாழ நாடும் செயல்
பலம் உள்ள சத்து திறனே.

அணுகும் வகை உள்ளதே உள்ளம்.
மண்டும் மண்டலம் மண்டபம் என்றும்
உண்டு உயிர்த்து பெருகும் பொறிகள்
தண்ணீர் பெற்று வளரும் தன்மை.

பழகும் தமிழும் மொழியும் பலவும்
உழன்று நிலைத்து நிற்கும் சொல்லும்
மழலை பேசும் மனிதம் யாவும்
ஊழ்வினை செய்த உயர்திணை பயனே!


கம்பன் கவியில் கவிதை வடிக்கும்.



தொன்று தொட்டு வரும் கருத்தும்
தொன்மை பதிவில் எழும் நிலைக்கும்
தென் வடம் கிழக்கு மேற்கிலும்
பொன் பொருளும் அறத்துடன் சேரும்.

எழும் கருத்தும் சொல்லில் மலரும்
உழும் தொழில் உணவு பொருள்
தவழும் மழலையும் பயிலும் அளவே
மகிழும் வாழ்வும் தொடர்பில் நிலைக்கும்.


தொல்காப்பியர் எழுத்துரு இலக்கணம் வகுக்கும்
ஔவை சொல் செயல்பட வைக்கும்
வள்ளுவன் சொன்ன சொல்லும் அறமும்
கம்பன் கவியில் கவிதை வடிக்கும்.


பேசிப் பழகும் மொழி பேசும்
நாசி நரம்பும் நேசத்தில் துடிக்கும்
வாசிப்பு பழக்கத்தில் வாய்ப்புகள் உண்டு
ஆசிரியர் தகுதி நாலும் கற்பதே.

நாள் தோறும் தேற்றம் தேறும்
வாள் முனையும் வேள்வி முனைப்பும்
தோள் தட்டி காட்டும் படம்
ஆள் பாதியிலும் ஆளுமை மிகும்.





காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள்


அன்பும் பண்பும் நிறைஞ்சு தான்
நின் அறியும் ஆற்றல் கூடுச்சாம்
உன் அறமும் பயனும் நிலைச்சுசாம்
இன்பம் தேடும் உயிரும் தான்

புதிய இடுகை பழகும் வாய்ப்பு
மதிய உணவு மதிப்பு வாழ்வு
நதியும் நாடும் வளர் நிலை
உதியம் ஆகும் உயர் அணை..

பொங்கிடும் பதிந்திடும் மலர்ந்திடும் இனித்திடும்
தங்கிடும் தவழ்ந்திடும் தந்திடும் பெற்றிடும்
வாழ்ந்திடும் ஒடிடும் உருண்டிடும் ஆண்டொடும்
சார்ந்திடும் நகர்ந்திடும் போக்கிடும் ஊடுரும்.

காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள்
நாட்களில் பயனுறும் சொற்களை பதியுங்கள்
ஆட்சியில் ஆளும் போட்டி அரசுகள்
சாட்சி சொல்ல சார்பு செயலாளர்கள்.










காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள்


அன்பும் பண்பும் நிறைஞ்சு தான்
நின் அறியும் ஆற்றல் கூடுச்சாம்
உன் அறமும் பயனும் நிலைச்சுசாம்
இன்பம் தேடும் உயிரும் தான்

புதிய இடுகை பழகும் வாய்ப்பு
மதிய உணவு மதிப்பு வாழ்வு
நதியும் நாடும் வளர் நிலை
உதியம் ஆகும் உயர் அணை..

பொங்கிடும் பதிந்திடும் மலர்ந்திடும் இனித்திடும்
தங்கிடும் தவழ்ந்திடும் தந்திடும் பெற்றிடும்
வாழ்ந்திடும் ஒடிடும் உருண்டிடும் ஆண்டொடும்
சார்ந்திடும் நகர்ந்திடும் போக்கிடும் ஊடுரும்.

காட்சிகளின் காலத்தில் கோலம் போடுங்கள்
நாட்களில் பயனுறும் சொற்களை பதியுங்கள்
ஆட்சியில் ஆளும் போட்டி அரசுகள்
சாட்சி சொல்ல சார்பு செயலாளர்கள்.













சுற்றி வரும் புவி சுழற்சி :

சுற்றி வரும் புவி சுழற்சி
ஆற்றி வரும் கோள்கள் சுற்றி
போற்றி வரும் ஒளிரும் நிலை
பற்றி வரும் மின்னும் மீன்களே.

பேரண்டம் பேரதிர்வு பேரதிர்ச்சி நிகழ்வுகள்
கண்டம் கொண்ட பண்டம் யாவும்
அண்டம் அறிவு இயற்கை முறை
ஆண்டு தோறும் ஆண்டவனின் வெற்றிடம்.

ஊடும் அகம் புறம் பற்றும்
ஆடும் வரை ஆட்டம் போடும்
தேடும் கண் தோன்றும் படம்
நாடும் ஊரும் பேரும் உலகமே.

அழை அவை அரசு சேவை
மழை நீர் மண் சேர்க்கை
உழை உழவன் உணவு வகை
ஏழை எளிய மக்களின் தானம்.

காட்சி காலம் காட்டும் உண்மை
மாட்சி பெறும் மனித உயிர்
ஆட்சி மாற்றம் ஆளும் வர்க்கம்
பட்சி வரலாறு ஓடும் களம்.

பறவை இனம் பகுத்து அறியும்
இறங்கு முகம் இடித்து காட்டும்
ஏறும் வரை தன் ஏற்றமே
மாறும் என்று சொல்லி விடுவர்.

ஓன்றி ஒன்றும் ஆறனையில் அணியும்.


அறுதி அளவு அன்பில் உண்டு
உறுதி படும் சொல் செயல்
இறுதி வரை ஒன்றும் உயிர்
ஊறும் உமிழ்நீர் கொண்டு பேசு.

மனித மொழி மாற்றம் மாறும்
இனிய உயர் திணை தாயனை
கனிவு மொழி மழலை பதிவு
ஓன்றி ஒன்றும் ஆறனையில் அணியும்.

அசை இசை ஓசை வரும்
கையசை நேரிசை வெண்பா மாலை
காற்றசைவு பாட்டிசை பாடல் வரிகள்
ஒற்றிசை ஒன்றி இசைக்கும் நேரசைவு.

அலை வந்து கரை மோதும்
இலை உதிர் பூ மலரும்
மலை முகடு தலை முடி
உலை கூட்டும் உடைமை காட்டும்.

உறவு முறை யாவும் ஒன்றும்
பறவை இனம் கண்டு பிடிக்கும்
கறவை மாடு பால் சுரக்கும்
ஏறவைத்தல் இறங்கவைத்தல் இயங்குபவை இயக்குபவை.

பாடும் உள்ளம் பழகும் நெஞ்சம்

பாடும் உள்ளம் பழகும் நெஞ்சம்
தேடும் உறவும் நட்பும் நாடும்
ஓடும் ஒட்டும் ஒண்டும் மட்டும்
இடும் தடம் தரும் ஊரும்

ஆடும் அசையும் இசையும் ஓசையும்
ஒன்றிடும் தாளமும் சுதியும்
நிலைத்திடும்
ஆடிடும் நிகழ்வும் மகிழ்ந்திடும் பெருகிடும்.
போற்றிடும் வகையும் உயிர்த்திடும் உலகிடம்.

அன்போடும் அறனோடும் பொருளோடும் புவியோடும்
தழைத்தோடும் செழித்தோடும் பயிற்சியும்
வளர்ச்சியோடும் வளர்ந்தோடும்
நிலையும் நின்றோடும் நிலைத்தோடும் பேரண்டத்தோடும்.

உயிரோடும் உணர்வோடும் செல்களும் பிரிந்தோடும்
செயலோடும் சென்றோடும் உயிரணுக்களோடும் கோடிகளோடும்
அயலோடும் அணியோடும் புரதமும் புதிதாகும்
வயலோடும் வளமோடும் உழவரோடும் நிலையாகும்.

காயோடும் கனியோடும் தாவரமும் தரணியாளும்
தாயோடும் தந்தையோடும் குழந்தைகளும் நல்லினமாகும்
வாயோடும் வயிற்றோடும் வாழ்வும் வாக்கினிலோடும்
இயலோடும் இசையோடும் ஊடகமும் முறையிலோடும்.

பொருளோடும் பண்போடும் இன்பத்தோடும் பயனோடும்

ஆருயுரோடும் சார்போடும் நிறைவோடும் பாய்ந்தோடும்

இருந்தோடும் இழைந்தோடும்
இயல்போடும் நிகழ்ந்தோடும்

உருவோடும் வடிவோடும் அழகோடும் நினைவோடும்.




கதை கதா பாத்திரம் தைக்கும்


கதை கதா பாத்திரம் தைக்கும்
இதை அதை முடிக்கும் முடிவிலாததே
வதை பட எடுக்கும் தொடர்
சிதை எனும் நினைவு கொள்ளாதே.

கவி எனும் கற்பனை விதை
புவி தனில் படியும் வாழ்வு
ஏவி விடும் ஏட்டிலும் நிலைக்கும்
ஆவி சேர் நிலை கருவகம்.

தனிமனித உரிமை ஒளி உமிழும்
இனிவரும் வழி யாவும் வசப்படும்
நனி தமிழ் நன்றி சொல்லும்
கனி தருவது ஒரு தேர்ச்சி.

நாடி வரும் இன்பம் பெறுக
தேடி சென்று அறிவை பெறுக
ஓடி ஆடி உயிரை காப்பாற்று
அடி சென்று ஆணி வேராயிரு.

நிகழ் காலம் எதிர் கொள்
இகழ் இடி போல் தெரியும்
மகிழ் உயர் ஊறும் உயிர்
புகழ் சிறகு விரித்து ஆடும்.

அருமை என ஆற்றிடும் செயல்
பெருமை என விரும்பிய வினை
கருமை தனில் தழைத்திடும் குருதி
மறுமை வரை மாற்றிடும் பண்பே.

கதை கதா பாத்திரம் தைக்கும்

நிறை மறை அன்பு போற்றும்.

இயல் இசை ஓர் அசை
முயலும் திசை ஓர் பண்
அயலும் முறையும் மறு முறையே
கயல் விழி திறன் பாடும்.

அசை போடும் சீர் தளை
இசை ஆகும் ஒன்றில் இணை
தசை ஊர சதை சேறும்
விசை யாவும் ஓர் மரபு.

மண் மண்டலம் கண்டம் பேரண்டம்
உண் உயிர் பெறும் நிலை
கண் உயர் நரம்பும் சொல்லும்
விண் வெளி இயல்பும் அசையும்.

ஆக்கம் ஆற்றல் அளவு ஆகும்
ஊக்கம் உடைமை மாற்றம் தரும்.
இயக்கம் இயங்கும் நன்மை பன்மை
ஐக்கியம் குறிக்கும் தன்மை பாடு.

உறவே நட்பே உலகம் முழுதும்
பறந்து செல்லும் செல்லுக்கும் உண்டு
இறைமை பழக்கம் முறைமை இடமே
நிறை மறை அன்பு போற்றும்.

ஆற்றல் ஆர்வம் வரவின் இருப்பு.

கற்பதும் கற்பதில் கடப்பதும் ஏற்பதுவே
நிற்பதும் நிற்பதில் நிறைவதும் செயலதுவே
ஏற்பதும் எற்பதில் நிலைப்பதும் எங்குமதுவே
சொற்பதம் சொற்பதத்தில் நற்றமிழும் நாபதமே.

அன்பு அறம் ஆற்றல் ஆக்கம்
இன்னுயிர் இயற்கை ஈன்றதும் ஈற்பதுவே
உன்னுயிர் உறவதும் ஊர்வதும் ஊரகமே.
என்னுயிர் என்பதும் ஏற்பதும் ஏற்படும்.

கற்றார் கடந்தார் காப்பதில்
காத்தார்
உற்றார் உறைந்தார் ஊடகத்திலும் ஊர்ந்தார்
பெற்றோர் பெற்றார் மற்றோர் மகிழ்ந்தார்
ஏற்றோர் ஏற்பதும் இளையோர் இயக்கம்.

வரலாறு உருளும் ஓடும் பொருந்தும்
உரையாடல் மூலம் தொடர்பும் தொடரும்
அரசு அரசாணை வெளியீடும் முறைமை
பரிந்துரை பண்பாடு பட்டியல் கலாச்சாரம்.

இயற்கை இயல்பு வாழ்வு நிலைப்பு
செயற்கை சேர்ப்பது தொழில் வனப்பு
ஆய கலைகள் ஞானம்
தொடர்பு
வையத்து நுழைவு வாயில் வாணிகம்.

பற்றுவது நாளின் முதல் முறை
தேறுவது தேடுவது தேடல் முடிவுகள்
மாறுவது மாற்றுவது மாண்புறும் மதிப்பு
ஆற்றல் ஆர்வம் வரவின் இருப்பு.

நிறை ஊன்றும் உதவும் பகிரும்.

ஆவி சூழலும் வளி மண்டலம்
பாவி மேவிய நாடும் பொருள்
தூவி அங்கங்கே தொடரில் செல்லும்.
கவி பாடும் பாடல் வரிகள்.

இதுவே முதல் முறை தேற்றம்
அதுவும் குறிப்பினில் பயணம் தோறும்
தாது பொருள் விடும் தூது
சூது வாது காதல் தோது.

உயிர் மூச்சு தொடர்பு ஆகும்
பயிர் விதைகள் பதிய வளரும்
ஆயிரம் கோடி நினைவு அலைகள்
பாய்ந்திடும் ஊர்ந்திடும் சேர்த்திடும் காத்திடும்.

உறவே பண்பே நட்பே பலனும்
துறவே துளிரும் துள்ளல் துளியும்
மறவேன் மாட்சிமை பொலிவே பொருந்தும்
ஏறுவேன் இயல்பின் நிகழ்வே இனிது.

குறை கண்டோர் உரை சொல்வர்
துறை பயின்றோர் நிலை அறிவர்
மறை வேதம் யாவும் வசப்படும்
நிறை ஊன்றும் உதவும் பகிரும்.

பொங்கும் உறுதி கொள்ளும் காலமே.

குறியீடு முந்திடும் குறிப்பினை அறிந்திடும்
பொறி கொண்ட ஆற்றலே வழி
ஏறி இறங்கும் மூச்சும் பேசும்
வறிய நிலையே ஆளும் பண்பு.

பண்பும் நட்பும் உறவும் காணும்
உண்ணும் உணவு உண்மை பேசட்டும்
கண்டும் கேட்டும் பார்த்தும் படித்தும்
தொண்டும் தொடருமே தொகுப்பு வாழ்வு.

பசி கண்டு வாழும் உயிர்
ஆசி வழங்கும் தொழுகை முறை
பேசி பழகிய பொது சமயம்
பூசி மெழுகும் புனித‌ தொடர்.

மதி கொண்டார் புவி வென்றாரென
விதிக் கொள்கை வீதியெ லாம்
நிதி ஓடும் திறனே ஆள்வோர்
நதி நீர் இணைப்பு ஓவியமே.

பற்று கொண்டோர் பளிச்சிடும் வெண்மை
வெற்று முழக்கம் வேலை வேண்டும்
தொற்றி தாவி சென்றிட கொடி
ஊற்றி ஊன்றி வளரும் ஆட்சிமுறை.


அங்கம் வகிக்கும் உறுப்பு நலம்
பங்கம் விளையும் நொடிப் பொழுதும்
தங்கம் போல மேனியும் தளர்ந்திடும்
பொங்கும் உறுதி கொள்ளும் காலமே.

பொங்கும் உறுதி கொள்ளும் காலமே


குறியீடு முந்திடும் குறிப்பினை அறிந்திடும்
பொறி கொண்ட ஆற்றலே வழி
ஏறி இறங்கும் மூச்சும் பேசும்
வறிய நிலையே ஆளும் பண்பு.

பண்பும் நட்பும் உறவும் காணும்
உண்ணும் உணவு உண்மை பேசட்டும்
கண்டும் கேட்டும் பார்த்தும் படித்தும்
தொண்டும் தொடருமே தொகுப்பு வாழ்வு.

பசி கண்டு வாழும் உயிர்
ஆசி வழங்கும் தொழுகை முறை
பேசி பழகிய பொது சமயம்
பூசி மெழுகும் புனித‌ தொடர்.

மதி கொண்டார் புவி வென்றாரென
விதிக் கொள்கை வீதியெ லாம்
நிதி ஓடும் திறனே ஆள்வோர்
நதி நீர் இணைப்பு ஓவியமே.

பற்று கொண்டோர் பளிச்சிடும் வெண்மை
வெற்று முழக்கம் வேலை வேண்டும்
தொற்றி தாவி சென்றிட கொடி
ஊற்றி ஊன்றி வளரும் ஆட்சிமுறை.


அங்கம் வகிக்கும் உறுப்பு நலம்
பங்கம் விளையும் நொடிப் பொழுதும்
தங்கம் போல மேனியும் தளர்ந்திடும்
பொங்கும் உறுதி கொள்ளும் காலமே.

2. தெரிவது, அரிது! -கரந்துறையில்- கற்றதனால் என தொடங்கும் குறள்.

தெ - தெளிவுடன்
ரி - ரிதமாக
வ - வருவதையுணர்ந்து
து - துணை புரிவதுடன்,

அ - அறியாததையும்
ரி - ரிதமென ஒத்துக் கொண்டு
து - துதிப்போம்.

சொற்களை தெளிவுடன் கற்பதும்,

மற்றவர்களுக்கு புரியுமாறு உணர்த்துவதோடு,

தெரியாததை அறிந்து கொள்ள வேண்டும்

என துதிப்பதும் மிகச் சிறந்த பழக்கமாகும்.

2. கற்றதனால் ஆய பயன்என்கொல்? வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.




1. வாசி, ஒரு பதமே
----------------
வா-வாழ்வதும்
சி -சிந்திப்பதும்,

ஒ - ஒவ்வொருவரின்
ரு - ருசிகரத் தன்மையை

ப - பக்தியுடன்
த - தரணியில்
மே- மேம்பாட்டுடன் செயல்படுவதேயாகும்.

மேற்கூறிய கரந்துறை பாக்களுக்குரிய விளக்கம்

வாழ்வது, உயிரின் செயல்.
சிந்திப்பது, மனித பரிமாணத்தின் வளர்ச்சி.

அவரவர்களின் வாழ்வு, ஒருமைபாட்டுடன் தரணியில் நிலைக்கும்.
ஒருமைபாட்டின் செயல் நம் கையை கும்பிட்டு வணங்குதலை குறிக்கும்.

மேம்பாட்டின் செயல், இயற்கைத் தன்மையுடனே வளரும்.

ஒரு பதம் என்பது பிரபஞ்சம் என
நாம் அறிவோம்.

அகர முதல எழுத்துஎல்லாம் ஆதி
பகவன் முதற்றை உலகு.


திருக்குறள், நித்தியமும் திக்கெட்டும் பரவும் நூல்.
திருக்குறள், எக்காலமும் சொற்களால் சிறப்புறும் நூல்.
திருக்குறள், அறத்தை காத்து, அன்பை போற்றும் நூல்.
திருக்குறள், மனிதம், இயற்கை நிலையை பதிந்தவை.

திருக்குறளை, இரு வரிகளில், கரந்துறையில்
இரு சொற்களின் முதல் எழுத்திலேயே,
ஒவ்வொரு திருக்குறளின் கருத்துக்கள் செயல் மன்றம் பதிவில் தொடர்கிறேன்.

திருக்குறள் முதல் 3 அத்தியாயம்-30-
கரந்துறை வரிகளில். (மாதிரிக்காக)

எண் திருக்குறள் முதல் வரி கரந்துறை வரியில்

1. அகரமுதல வாசி, ஒரு பதமே.
2. கற்றதனால் தெரிவது அரிது.
3. மலர்மிசை நிலமிசை மலராக.
4. வேண்டுதல் இல சில.
5. இருள்சேர் சேராது இரு.
6. பொறிவாயில் ஐவகை போகாதே.
7. தனக்குவமை அமைதி அரிது.
8. அறவாழி அகமே சரி.
9. கோளில் ஐவகை சில.
10. பிறவிப் பெரியதாக இரு.
11. வான்நின்று அமுது அது.
12. துப்பார்க்கு சமையலாக ஆகுக.
13. வின்நின்று விரி நீராக.
14. ஏரின் விவசாயமே விரிவாக.
15. கொடுப்பதூஉம் பருவகால சாராக.
16. விசும்பின் பசுமை உயர.
17. நெடுங்கடலும் மேகமாக ஆகி.
18. சிறப்போடு தேவராக வசி.
19. தானம் உலகே தவமாக.
20. நீர்இன்று உலகு அமையாது.
21. ஒழுக்கத்து பெருமை நூலாக.
22. துறந்தார் வையக பெருமை.
23. இருமை இருமை உலகு.
24. உரன் ஐவகை விதை.
25. ஐந்துஅவித்தான் சமயமே சரியாக.
26. செயற்குஅரிய பெரியது அரிது.
27. ஓசைஒளி ஓசை வகை.
28. நிறை மொழி பெருமை மிகு.
29. குணம்என்னும் வெகு அரிது.
30. அந்தணர் உயர கருது.





















செயல் மன்றம் என்ற இணையத்தில் , தொல்காப்பியம், திருக்குறள், பல புத்தகங்களின் விமர்சனம் ஆகியவற்றிற்றை நன்கு புரியும்படி விவரித்து உள்ளேன். தங்களின் கருத்துக்களை தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

மிக்க அன்புடன்,
தங்கவேலு
9486063289


THANGAVELU C கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே