என்னுள் மோதிய முகமே .. ~~~~~~~~~~~~~~~~~~~~ பக்குவ நிலைகளை...
என்னுள் மோதிய முகமே ..
~~~~~~~~~~~~~~~~~~~~
பக்குவ நிலைகளை
படர வைக்கும் நொடிகளிவை ..
தன்னிலை மறந்து
உடைந்து போகாமல் ..
அனுபவ கோடுகளில்
ஆழ்மனதை மூழ்க வை ..
முடங்கி கிடக்கும்
மூளையை ..முற்றிலும்
முயலும் திசைக்குள்
தினசரி திருப்பு ..
நிரந்தரமற்ற மாற்றங்களில்
நிச்சயம் நீ .
வெற்றிகென நிற்கிறாய்
எதோ ஒன்றில் மட்டுமே
எல்லாம் அடங்கி உள்ளது ..
உன்னில் உலவும்
மெய் உருவமற்ற
உணர்வை போல ..
நகரும் கணங்களில்
உன் ரணங்கள் உதிரும்...
உனது ஒவ்வொரு உள்வாங்கலும்
உயர் வெளிபாடென
உன்னை உருவாக்கும் ....
- தேன்மொழியன்