எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெண்டுறை .. ஐங்கரன் அருளிய வரம் .. கரிமுகன்...

வெண்டுறை ..

ஐங்கரன் அருளிய வரம் ..

கரிமுகன் முன்னின்று இருகரம் கூப்பி
வறியவன் ஒருவன் வரமொன்று கேட்க
தருவேன் வரமும் கேள்எனச் சொல்லி
கரிமுகன் சிரமும் அசைத்தான்

பரிமேல் திருமால் கல்கி உருவில்
வரும்நாள் வரைக்கும் உயிருடன் நானும்
இருந்திடல் வேண்டும் இருந்திடல் வேண்டும்
வரமிதைத் தாரும் என்றான்

பக்தா உன்னைப் படைத்தவன் பிரம்மன்
சித்தம் எதுவோ அதுவே நடக்கும்
பித்தன் மகன்நான் ஒன்றே சொல்வேன்
கொன்றால்பா வம்தின்றால் தீரா

ஆண்டார் பலரும் அகிலத் தில்லை
தாண்டார் மனிதர் மரணம் வருமின்
வானில் மின்மினிக் கூட்டம் ஒன்றில்
உன்முகம் தெரியும் தேடு

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 10-Jul-15, 4:48 pm

மேலே