எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தாலாட்டு பாடி கண்ணே உன்னை தூங்க வைத்தால் நீ...

தாலாட்டு பாடி கண்ணே
உன்னை தூங்க வைத்தால்
நீ தூங்காமல் என்னையும்
தாயாக்கி பார்க்கிறாயே?
தாயாகி நானும்
தாலாட்டிசை இசைக்கிறேன்!
சேயாகி உன்னுடன் சேர்ந்திருக்கிறேன்!
தாயவளும் இங்கிலலை யென்று
தாளாமல் நீயும் ஏங்குகிறாயோ?
தளராதே பொன் மானே!
விடியல் வெகுதூரமில்லை விண்மீனே!
விளையாடி பார்த்தது விதி தானே!
வினையை முறிக்குது மதிதானே!
பெற்றவளை தேடித்தேடி கண்ணே
உன் விழிகளும் கலங்கித்தான் போனதோ?
பெற்றவன் நானும்
மனதிற்குள் அழுது கொண்டனே!
புன் சிரிப்பாலுன்னை தேற்றுகின்றேனே!
பூவாகி என் தோள்மீது
சாய்ந்து கொள்ளம்மா!
தாயவளும் வருவாளம்மா
தாளாத துயரத்தையும் தீர்ப்பாளம்மா!
சின்னஞ் சிறு கிளியே
கண்ணுறங்கம்மா கண்ணுறங்கு!!!

நாள் : 18-Feb-14, 10:33 pm

மேலே