எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பு மகளே... சோம்பலாய் படுத்தால் படுக்கை ---------------------- உனக்கு...

அன்பு மகளே...

சோம்பலாய் படுத்தால் படுக்கை 
----------------------  உனக்கு சாக்காடு

எழுந்து நட பூமி 
-------உனக்குப்  பூக்காடு 


படுத்தே கிடந்தால் 
--------------வாழ்க்கை உனக்குப் படுக்கையாகிறது

 விழித்து நடந்தால் அதுவே 
------------------------உனக்குப் பாதையாகிறது 

ஒளி குறைந்த வீதியிலும் 
உன் விழிகளுக்கு வழி தெரியும் 
இதயத்தில்  தீபம் மட்டும் 
------------------------------------எரிந்து கொண்டிருந்தால்


மகளே....
********எழுந்து நட 
********அந்த 
********வானம் உனக்குக் குடை பிடிக்கும் 
********பூமி உனக்கு வழி கொடுக்கும் 

   
குறிப்பு:
என் துறைத் தலைவர்  திரு.வி .ஜோசப் இம்மானுவேல் அவர்கள் எனக்கு எழுதி தந்த கவிதை இது...

நாள் : 19-Nov-15, 10:17 am

மேலே